காலையில் இந்த அறிவிப்பை தமிழ்மணத்தில் பார்த்தேன்.மனதில் இனம் புரியாத ஒரு வருத்தம், வெற்றிடம் என்னவோ சொல்ல முடியாத ஒரு உணர்வு. மாற்றங்கள் மட்டுமே நிரந்தரம் என்று எண்ணி வாழப்பழகிக் கொண்டவனாய் இருந்தாலும் சில நேரத்தில் மாற்றங்கள் சில கீறல்களை மனதில் ஏற்படுத்தவே செய்கிறது.
தமிழ்மணத்தின் விற்பனை என்பது அதன் உரிமையாளரின் விருப்பம்.இதில் நான் (யாரும்) ஏதும் சொல்ல முடியாது. நான் எனது வலைப்பதிவுகளை தமிழ்மணத்தில் பட்டியல் இடுவதில் இருந்து விலக்கி பல மாதங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் ஒரு வாசகனாக தினமும் தமிழ்மணத்தை வலம் வருவது உண்டு.
காசியின் ஆர்வமும் இந்த திரட்டியை அவர் பார்த்துப் பார்த்து உருவாக்கியதும் (செதுக்கியதும்) அதனால பல சிரமங்களை அவர் சந்திக்க நேர்ந்ததும் அனைவரும் அறிந்த ஒன்று. எனது பங்குக்கு தமிழ்மண உபயோகிப்பாளர் என்ற முறையில் நானும் சில கேள்விகளை அவரிடம் கேட்டதுண்டு.
எது எப்படி இருப்பினும் ஒரு சிறந்த தமிழ் வலைப்பதிவு திரட்டியை உருவாக்கியவர் என்ற முறையிலும்,எளிதில் அனுகக்கூடிய ஒரு நிர்வாகி என்ற முறையிலும் காசி எனக்குப் பிடித்தவரே.
சக வலைப்பதிவாளர் என்ற முறையில் காசி எடுக்கும் முயற்சிகள் அவருக்கு நல்ல முன்னேற்றத்தையும் மன அமைதியையும் வழங்கட்டும் என விரும்புகிறேன்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா
****************
தமிழ்ப்பதிவுகள்
தமிழ்
****************
Sunday, June 18, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
New comments are not allowed.