Friday, July 09, 2010

தமிழ்ப் பதிவர்களின் இஸ்லாம் விமர்சனம் ‍ - உங்களை நீங்களே சேதப்படுதிக் கொள்ளும் அபாயம் உள்ளது


தங்கள் , அதன் அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்கள் இவையாவும் தெரிந்தோ , தெரியாமலோ அதைப் பின்பற்றுபவர்கள் , மேலும் அவர்களின் பிரச்சனைகள் என்று எல்லாம் எப்படியோ போகட்டும் என்று இருந்துவிடலாம். ஆனால், மதத்தில் பிறந்துவிட்ட காரணத்தினாலேயே , சில மனித உயிர்கள் துன்பப்படும்போது , சின்னச் சின்ன நியாயங்கள், உரிமைகள் ,மறுக்கப்படும்போது , அவர்களுக்காக வரும் அனுதாபம் மற்றும்  ஆதங்கமானது மதம் மீதும் அதன் அடிப்படைக் கொள்கைகள் மீதும் விமர்சனமாக வந்துவிடுகிறது. சவூதி போன்ற நாடுகள் "முலைப்பால் கொடுத்தால் பெண்கள் இரத்த சம்பந்தம் இல்லாத ஆண்களுடன் இருக்கலாம்"   என்று சொல்லும் போது,  வருத்தமும் , கோபமும், இயலாமையும் வரத்தான் செய்கிறது.  ஒரு பெண் , யாருக்கு முலைப்பால் கொடுக்கலாம் என்பதையும் , கட்டாயம் அவர்களின் ஓட்டுனருக்கு முலைப்பால் நேரடியாக கொடுக்க வேண்டும்  என்பதையும் எப்படி ஒரு சில சமயங்களும் அதன் கொள்கைகளும் தீர்மானிப்பதாகச் சொல்ல முடிகிறது?

நாம்  உண்டு , உறங்கும், வாழும், பகிர்ந்து கொள்ளும் இதே உலகில் எத்தனையோ விசயங்கள் நடந்தாலும் , நமது பார்வைக்கு வரும் இப்படியான அத்துமீறல்கள், கொடுமைகள்மீது ஒரு சின்னக் கோபம்கூட வராமல் "அர்த்த ராத்திரி வேளையில் சனியனுடன் பீடி குடித்தேன், காத்து பிரிந்த போது சனியும் பிரிந்தது"   என்று எண்டர் கவிதைகளும் , கண்றாவிப் கதைகளும் எழுதிக் கொண்டிருக்க முடியவில்லை. தமிழ் வலைப்பதிவுகளில் மத விமர்சனங்களைச் செய்பவர்கள் சிலரே.  அப்படி இயங்குபவர்களுக்கு மதவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வருவது என்றும் வழக்கமாக  நடக்கும் ஒன்றுதான் என்றாலும் , சமீபகாலமாக  அது சிலருக்கு அதிகமாகவே நடக்கிறது.


ந்து மதத்திற்கு என்று எந்த சட்டதிட்டங்களும் இல்லை. யார் யார் இது இது இல்லையோ அவர்கள் எல்லாரும் இந்துக்கள் என்ற அளவில்தான் சைவம், சமணம், வைணவம் , சீக்கியம் என்று எல்லாவற்றையும் கொண்ட சாம்பாராக இந்துமதம் உள்ளது. THE CONSTITUTION OF INDIA  Article 25 (2)(b) அதன் பங்கிற்கு ஒரு குழப்பமான விளக்கத்தைச் சொல்லிச் செல்கிறது.
http://india.gov.in/govt/documents/english/coi_part_full.pdf
 
Fundamental Rights  Right to Freedom of Religion 
25.(1)Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practice and propagate religion.
(2)Nothing in this article shall affect the operation of any existing law or prevent the State from making any law. 
(a)regulating or restricting any economic, financial,political or other secular activity which may be associated with religious practice; 
(b)providing for social welfare and reform or the throwing open of Hindu religious institutions of a public character to all classes and sections of Hindus.
Explanation I.The wearing and carrying of kirpans shall be deemed to be included in the profession of the Sikh religion. 
Explanation II.—In sub-clause (b) of clause (2), the reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jaina or Buddhist religion,and the reference to Hindu religious institutions shall be construed accordingly.

சுலபாகச் சொல்ல வேண்டும் என்றால்,  இந்தியாவில் பிறக்கும் எல்லாரும் இந்துக்களே அவர்கள் வேறு மதத்திற்கு மாறாதவரை. அப்படியே மதம் மாறினாலும் இந்தியாவில் தோன்றிய மதங்களுக்குள் மாறினாலும் இந்துவாகவே அறியப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள முருகன் இரண்டு பொண்டாட்டி வைத்து இருப்பது நியாயமா? என்று கேட்டால் காஷ்மீரப் பண்டிட்களுக்கு ஒன்றும் கவலை இல்லை. முனியாண்டி சாமியைக் குற்றம் சொன்னால் மும்பை இராம வாலாக்களுக்கு ஒரு கவலையும் இல்லை. இந்த நிலையில், இந்து மதத்தின் மீது விமர்சனம் என்பது இலக்கில்லாமல் சாட்டப்படும் குற்றச்சாட்டு. பலர் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வது இல்லை.  வர்ணாசிரம விமர்சனங்களே இன்னும் இந்துமத விமர்சனமாக தமிழ்ப்பதிவுகளில் வலம் வந்து கொண்டு உள்ளது.

கிறித்துவம்,  பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, கருவைக் கலைக்க போப் எதிர்ப்பு ஆனால் ஒன்னொரு பிரிவு ஆதரவு , ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு ஆதரவு , ஓரினச்சேர்க்கையாளரே மத போதகராக இருக்க ஆதரவு, எதிர்ப்பு என்று
கிறித்துவ மதவாதிகளே பரிசோதனைகள் செய்து கொள்வதால் சிலுவைப் போர் காலங்களைப் போல பெரும் சண்டைகள் வருவது இல்லை. ஒரிசாவில் நடந்த விசயங்கள் நினைவில் வந்து போகிறது .( More Christian homes set on fire, three bodies fished out of river http://www.asianews.it/news-en/Orissa:-More-Christian-homes-set-on-fire,-three-bodies-fished-out-of-river-13342.html  ) இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில்,  கிறித்துவத்தால் பெரும் சண்டைகள் இல்லை. அது பாட்டுக்கு முட்டை போட்டு குஞ்சு பொறித்துக்கொண்டுள்ளது என்றே சொல்லாம். கிறித்துவம் ஓரளவிற்கு இயல்பை ஏற்று, மாற்றங்களைப் பரிசோதித்து ஏற்பவர்கள்,  எதிர்ப்பவர்கள் என்று அணுக்களைப் போல ஒன்று இரண்டாகி , இரண்டு நான்காகி அது பாட்டுக்கு தன்னை பெருக்கிக் கொள்கிறது. 

ன்றுவரை என்னால் விளங்கிக்கொள்ள முடியாத , இன்னும் புரிந்து கொள்ளமுடியாத ஒன்று இஸ்லாமியர்களின் உலகளாவிய செயல்பாடுகள். ஒவ்வொரு இஸ்லாமியரும் கீழ்க்கண்டவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள். இதை ஏற்காவிட்டால் அவர்கள் இஸ்லாமியர் இல்லை என்பது எனது புரிதல்.
  1. ஒரே இறைவன் (அரபியில் அல்லா எனப்படும் வார்த்தை தரும் பொருளை தமிழில் இறைவன்  அல்லது கடவுள் என்று கொள்ளலாம்)
  2. அந்த இறைவனின் நேரடி வேதம் என்று அவர்களால் நம்பப்படும் புனித குரான்.   http://www.alislam.org/quran/search2/ 
  3. அதை உலகுக்குச் சொல்லிய முகம்மது அவர்களை இறுதி இறைத்தூதராக (நபி) ஏற்றுக் கொள்வது.
  4. மேலும் முகம்மது அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் அல்லது அவரின் வாழ்க்கையின் வழியாக எப்படி வாழ வேண்டும் என்று அறியப்படும் ஹதீஸ்கள்.  http://iknowledge.islamicnature.com/hadith/
இவை எல்லாம் இஸ்லாமியர் என்பதற்கான அடிப்படை. இதில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் அவர்கள் இஸ்லாமியர் கிடையாது. அதாவது , குரானை மட்டும் ஏற்று , முகம்மது அவர்களை இறுதி இறைத்தூதராக (நபி) ஏற்றுக் கொள்ளாவிட்டால், நிறுவனப்படுத்தப்பட்ட இஸ்லாம் மதத்தில் இடம் இல்லை. (1) புனித குரான், (2) இறுதித் தூதர், (3) தூதரின் வாழ்க்கையாக பதியப்பட்டுள்ள ஹதீஸ்கள் மூன்றும் பிரிக்க முடியாதவை.

குரானின் மூல மொழி அரபி . அதில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு பல மொழிகளில் அது கிடைக்கிறது. அரபி வார்த்தையில் இருக்கும் அர்த்தங்களை விளக்குகிறேன் என்று மொழிபெயர்ப்பாளர்கள் அடைப்புக்குறிக்குள் தங்களின் கவித்துவ வர்ணனைகளையும் அவர்களின் அதீத கற்பனைகளையும் சேர்த்தே சொல்லுவார்கள்.  உதாரணமாக திருக்குறளுக்கான கலைஞரின் உரையையும் , சாலமன் பாப்பையாவின் உரையையும் படித்தால், அதில் அவர் அவரின் தனித்துவம் தெரியும் http://www.thirukkural.com . அதுபோல குரானின் மொழிபெயர்ப்புகளின் அடைப்புக்குறி வசனங்கள். உண்மையான விசயத்தை வளைத்து, திரித்து புதிய கருத்தை திணிக்கும். இது மொழிபெயர்பாளர்களின் ஆர்வத்தாலும் சில உள் நோக்கங்களாலும் வருவது.


 தேடுதல் மற்றும் ஆர்வம் உள்ள ஒருவரால் குரானின் மொழிபெயர்ப்பு பிரச்சனையை  சுலபமாக கடந்துவிடலாம். ஏன் என்றால் அரபியில் மூலம் உள்ளது. அரபியும் ஆங்கிலமும் தெரிந்த , இரண்டு கலாச்சாரங்களையும் அறிந்த ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் இதைக் கடக்க முடியும்.

அதிகமனா குழப்பங்கள் , பத்வாக்கள் போன்றவை குரானை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அவை எல்லாம் ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டது. ஹதீஸ்கள் என்பவை இறைவனின் நேரடி வார்த்தைகளோ அல்லது முகம்மது நபியின் நேரடி வார்த்தைகளோ அல்ல. இவை யாவும் மற்றவர்களால் சொல்லப்பட்டவை.  அதாவது முகம்மது நபியின்(0) அருகில் இருந்தவர்(1) அடுத்தவருக்குச் (2) சொல்லி அந்த அடுத்தவர் (3) இன்னொருவருக்குச்(4) சொல்லி இந்த நான்காமவர் பதிந்து வைத்தது.  இந்த வரிசை இன்னும் நீளலாம். 0 முதல் 4 வரை நான் சொல்வது ஒரு உதாரணமே. ஒருவர் ஹதீஸ் என்று ஒன்றைச் சொன்னால் , அதைச் சரிபார்க்க அவரில் இருந்து 4‍ --> 3 --> 2 -->1-->0  முகம்மது நபி தொடர்பைச் சரிபார்த்து அது சரியாக இருந்தால் மட்டுமே அதிகார பூர்வ ஹதீசாக ஏற்றுக் கொள்ளப்படும்.

மொழி பெயர்ப்புச் சிக்கலுடன் , எது அதிகார பூர்வமானது?  என்பதும் ஹதீஸ் விசயத்தில் சேர்ந்து கொள்கிறது. பிரச்சனை என்னவென்றால் "எந்த ஹதீஸ் சரி?" என்பதும் அப்படி அது சரியானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் மூலம் அரபி என்பதால் மற்ற நாடுகளில் "அதற்கான யாருடைய‌ மொழி பெயர்ப்பு சரி?"   என்பதும் அதன் வழி வரும் நடைமுறைச் சட்டங்கள்  அரபு நாடுகளின் நடைமுறைககளில் இருந்து வேறுபடுவதும் உண்டு.  இவை இன்னும் விடையில்லாத விசயங்கள்.சவூதியில் சரி என்று சொல்லப்படும் (அவர்கள் மொழிதான் மூலம்) அதே ஹதீசை தமிழ்நாட்டில் மேற்கோள்காட்டிப் பேசக்கூட முடியாது. அது ம‌த துவேசமாக கட்டம் கட்டப்படும். இது நடைமுறைச் சிக்கல். 

பிகளைப் பற்றி யாரவது இருக்கும் ஒரு ஹதீஸை வைத்து விமர்சித்தால்
இஸ்லாமியர்கள் சொல்வது "  அது சரியான ஹதீஸ் அல்ல" என்பதும் அல்லது "    அந்த ஹதீஸ்ற்கான அர்த்தம் அதுவல்ல " என்று சொல்வதும் வாடிக்கையான ஒன்று.  மேலும் அப்படிச் சொல்பவரை "  விவாதத்திற்கு வா "   என்பதும் , யாராவது  ஒரு மதப்பிரச்சாரகரைக் காட்டி "அவரிடம் பேசு" என்று சொல்வதும் வாடிக்கையான ஒன்று.  உலக அளவில் நபி அவமதிப்பு அல்லது அவரின் வாழ்க்கையான ஹதீஸ் குறிப்புகள் குறித்த சண்டைகள் பெரிய வன்முறையாக கொலை, குத்து சண்டை , போராட்டம் என்று நடந்து கொண்டே உள்ளது ஏதாவது ஒரு மூலையில். இப்படியான குரான், இஸ்லாம்  பிரச்சனைகளில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விசயம் சவூதி,ஈரான்,தாலிபான்கலின் நடைமுறைகள். குரான் , ஹதீஸ் மற்றும் இறைவனின் பெயரில் இவர்கள் செய்யும் தனிமனித வன்முறைகள், சுதந்திரங்கள் பெரும்பாலும் மாமியார் உடைத்த சட்டிபோல மற்ற நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களால் கண்டுகொள்ளாமல் விடப்படும்.  

லகில் உள்ள எல்லா இஸ்லாமியரைவிட, சவூதியில் வாழும் இஸ்லாமியருக்கு ஒரு சிறப்பு உள்ளது. அது அவர்கள் நாட்டில் உள்ள இஸ்லாம் வரலாற்றுப் பாரம்பரியமும் , அந்த நாட்டில் மெக்காவில் உள்ள காபா என்ற புனித இடமும். இந்தக் காரணங்களாலேயே சவூதி அரசு தனது அரசியல் அமைப்புச் சட்டமாக குரானைக் கொண்டுள்ளது. மேலும் முகம்மது அவர்களின் வாழ்க்கை குறிப்பான ஹதீஸ்களை தனது சட்ட விதிகள் தீர்ப்புகளுக்கு நேரடியாப்  பயன்படுத்துகிறது.


குரான் தான் சவூதியின் சட்ட அடிப்படை.
http://www.saudiembassy.net/about/country-information/laws/The_Basic_Law_Of_Governance.aspx


Article 1:
---------
The Kingdom of Saudi Arabia is a sovereign Arab Islamic State. Its religion is Islam. Its constitution is Almighty God's Book, The Holy Qur'an, and the Sunna (Traditions) of the Prophet (PBUH). Arabic is the language of the Kingdom. The City of Riyadh is the capital.

Article 45:
-----------
The Holy Qur'an and the Sunna (Traditions) of God's Messenger shall be the source for fatwas (religious advisory rulings).

Article 48:
----------
The Courts shall apply rules of the Islamic Sharia in cases that are brought before them, according to the Holy Qur'an and the Sunna, and according to laws which are decreed by the ruler in agreement with the Holy Qur'an and the Sunna.
 

இப்படி குரானையும், இறைத்தூதர் நபி அவர்களின் வாழ்க்கை முறையையும் கடைபிடிப்பதாகச் சொல்லும் இவர்கள் "பெண்கள் கார் ஓட்டக்கூடாது" என்று இன்றுவரை பிடிவாதமாக உள்ளார்கள். கேட்டால் அதற்கு சில ஹதீஸ்களை காட்டுகிறார்கள்.   மேலும் பெண்களை அடுத்தவருக்கு முலைப்பால் கொடுப்பதன்மூலம் அவர்கள் அடுத்த நாட்டு ஓட்டுநர்களை குடும்ப உறவாக‌க் கொள்ளாம் என்று "Shaikh Abdul Mohsin Bin Nasser Al Obaikan" ( member of Saudi Council of Senior Scholars and adviser to the king)  சொல்லியிருக்கிறார்.
"A woman can breastfeed a mature man so that he becomes her son. In this way, he can mix with her and her daughters without violating the teachings of Islam," the scholar said.
http://gulfnews.com/news/gulf/saudi-arabia/saudi-women-use-fatwa-in-driving-bid-1.643431
SAUDI ARABIA: Women threaten to breastfeed drivers if they aren't allowed to drive
http://latimesblogs.latimes.com/babylonbeyond/2010/06/saudi-women-use-fatwa-in-driving-bid.html



இஸ்லாமியராக அடையாளம் காட்டிக் கொள்ளும் தமிழ் பதிவர்களுக்கு......                         

விமர்சனம் என்ற‌ பெயரில் மற்றவர்கள்/பதிவர்கள் உங்களின் மத‌ நம்பிக்கையை கேலி செய்வது , சொற்களை வீசுவது தவறு. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் நீங்கள் எப்படி இந்த சவூதி அறிவிப்புகளையெல்லாம் சத்தமில்லாமல் கடந்து போகிறீர்கள் என்று தெரியவில்லை. அதுதான் ஆச்சர்யமாக உள்ளது.  முன்னாள் பெரியார்தாசன் அல்லது மறைந்த பாடகர் மைக்கேல் ஜாக்சன் இப்படி யாராவது இஸ்லாத்தில் சேர்ந்தால் , அதை இஸ்லாத்திற்கு மக்கள் வரும் ஒரு குறியீடாக வைத்துக் கொண்டு பதிவுபோடுகிறீர்கள்.

ஹதீசாக இருக்கட்டும் குரானாக இருக்கட்டும் சவூதியாக இருக்கட்டும் இப்படி பெண்களைச் செய்யச் சொல்வது சரியா?   மனிதர்களாக , சுயமரியாதை உள்ள யாருக்கும்  இப்படியான செயலைக் கண்டால் " என்ன கொடுமை? கார் ஓட்டக்கூடாது....சரி அதற்காக ஓட்டுனர் வைத்துக் கொண்டால் அவருக்கு பால் கொடுக்க வேண்டுமா? கிறுக்குத்தனமாக இல்லை"   என்றுதான் கேட்கத் தோன்றும்.

புனித நூல் குரானை அடிப்படையாகக் கொண்டது என்று அறிவித்துக் கொள்ளும் ஒரு நாடு (constitution is Almighty God's Book, The Holy Qur'an, and the Sunna (Traditions) of the Prophet (PBUH) உலக இஸ்லாமியர் அனைவரும் ஒருமித்து ஒருதிசை நோக்கி தொழ குறியீடாக இருக்கும் காபா (மெக்கா) வைத் தன்னுள் கொண்ட நாடு  இப்படி செய்வது குரானிற்கும் இஸ்லாத்திற்கும் களங்கம் இல்லையா?

ஒரு எதிர்ப்புக்குறியீடாக இதையெல்லாம் கண்டிக்கவே மாட்டீர்களா?  மாநாடுகளில் அல்லது மெக்கா செல்லும்போது ஒரு சின்ன போராட்டம் என்று எப்படியாவது ஒரு எதிர்ப்பைக் காட்டமுடியாதா? அவர்களும் நீங்கள் நம்பும் மதத்தைத்தானே அவமதிக்கிறார்கள்?
  • ங்களின் அரசியல் சட்டமே குரான் என்று சொல்லிக் கொண்டு இப்படிச் செய்யும் சவூதியை அரசை எத்தனை தமிழ் இஸ்லாமியர் புறக்கணிக்கிறார்கள்?
  • எத்தனை தமிழ் பதிவர்கள் (இஸ்லாமியராக அடையாளம் காட்டும் பதிவர்கள்) ,  சவூதி இஸ்லாமிய அறிஞர்களை விவாதத்திற்கு அழைத்து இருக்கிறார்கள்?‌
  • தமிழ்ப்பதிவர்கள் செய்யும் அவமதிப்பிற்கு மல்லுக்கட்ட தயாராக இருப்பவர்கள்,  ஏன் இது போன்ற‌ சவூதி இஸ்லாம் அறிஞர்களையும் நேரடி விவாதத்திற்கு அழைக்கக்கூடாது?
  •  அப்படி அழைத்து  சவூதி இஸ்லாம் அறிஞர்களுக்கு உண்மையான ஹதீஸ்களை எடுத்துக் காட்டி விளக்கலாமே? அல்லது சவூதியைப் புறக்கணிக்கலாமே?
  • Islam - sin  of ‘khulwa’ (staying alone with a stranger) என்று கூகிளில் தேடினாலே பல ஆச்சர்யங்கள் வரும். இவைகளை எல்லாம் வாதம் செய்து இஸ்லாத்தை அவமதிக்கும் சவூதி அடிப்படைவாதிகளை எதிர்த்து மற்ற இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டங்கள் விவாத அழைப்புகள் உண்டா?
  • வலைப்பதிவில் மல்லுக்கு நிற்கும் யாரும் இதுவரை ச‌வூதியை ஒரு எதிர்ப்பிற்காகவேனும் ,இஸ்லாம் அவமதிப்பிற்காக விவாதத்திற்கு வா என்று அழைப்புவிட்டதாகத் தெரியவில்லை.

தமிழில் வலைப்பதிவு செய்து கொண்டு இஸ்லாம் மதத்தை விமர்சிப்பவர்களுக்கு...


விமர்சனத்திற்கும் அவதூறுக்கும் உள்ள வித்தியாசம் , கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் உள்ள வித்தியாசம் போன்றது. ஒரு பெண் தொடை தெரியும் அளவிற்கு டவுசர் அல்லது குட்டைப்பாவடை போட்டால் அது கவர்ச்சி. ஆனால் அதே பெண், சேலையைக் கட்டிக்கொண்டு, கவன ஈர்ப்பிற்காக முழங்கால்வரை உயர்த்தினாலே ஆபாசமாக இருக்கும். கவனிக்க...இந்த நிலையிலும் டவுசரைவிட, சேலையே பெரும்பகுதியை மறைக்கிறது இருந்தாலும், அது ஆபசமாகவே இருக்கும். கடுமையான கருத்துக்களையும் எளிதாகச் சொல்லலாம். 


குரான் வழி நடப்பதாகச் சொல்லிக் கொண்டு பெண்களை அவமதிக்கும் பேச்சுக்களை ஏதோ ஒரு ஹதீஸைக் காட்டி பேசும் சவூதி இஸ்லாமிய அறிஞர்களைக்    கண்டிக்காதவர்கள், உங்களையும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்று நினைக்காதீர்கள். இது பெரிய பிரச்சனையாக வாய்ப்புள்ளது.

நீங்கள் இணையத்தில் எதோ ஒரு மூலையில் இருக்கும் ஏதோ ஒரு ஹதீஸை சுட்டி என்னவோ பேசுகிறீர்கள். அந்த தொடுப்பு இணையத்தில் இருப்பதே  ஒத்துக் கொள்கிறேன் . நீங்களோ  அல்லது எந்த தமிழ் வலைபதிவரும் உருவாக்கியது அல்ல. பிரச்சனை என்ன  என்றால் உங்கள் பதிவில் வெளியிட்ட குற்றத்திற்காக (??) நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டி வரலாம். இறைத்தூதர் முகமது நபி அவர்களின் படங்கள் இணையத்தில் உள்ளது. ஆனால் அதை குமுதம் போன்ற பத்திரிக்கைகள், "தகவலாக" வெளியிட்டால்கூட சங்குதான். 


தயவுசெய்து ஹதீஸ்களைத் தொடாதீர்கள். எது சரியானது ? எது உண்மை ? எந்த மொழிபெயர்ப்பு உண்மை?  யார் சொல்வது சரி ? என்று யாருக்கும் தெரியாது.

உயிர்ப்பயம் அல்லது வாழ்வியல் காரணங்கள் என்று எப்படி வேண்டுமானலும் அடுத்தவர்கள் சொல்லட்டும் , இதில் இருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. உங்கள் செயல் உங்களின் உரிமை. ஆனால் தக்க சமயத்தில் இடித்துரைக்காவிட்டால் நான் உங்களிடம் இணையத்தில் பேசிக்கொள்வதும் பின்னூட்டங்கள் பகிர்ந்து கொள்வதிலும் அர்த்தம் இல்லை.

சவூதி இஸ்லாம் அறிஞர்ககளுக்கு இருக்கும் சலுகைகள் உங்களுக்கு கிடைக்காது. அப்படியே பேச வேண்டும் என்றால் குரானை மட்டும் மேற்கோள் காட்டுங்கள். குரானைத்தாண்டி விவாதங்கள் ஹதீஸ் பக்கம் சென்றால்..." அய்யா, நான் கடவுளின் வார்த்தைகளை மட்டுமே நம்புகிறேன். குரான் சொன்னதாக குரானில் இருந்து மேற்கோள் காட்டுங்கள். மேலே பேசுவோம் " என்று சொல்லி நகர்ந்து விடுங்கள். ஆப்பில் நீங்களே போய் உட்கார்ந்து கொள்ளாதீர்கள்.

அப்படியே அவர்கள் குரானைக் கொண்டுவந்தாலும் எந்த தமிழ் மொழிபெயர்ப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு வாதம் செய்ய முயற்சிக்காதீர்கள். அவர்களிடம் , அதிகார, வசன எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டு முடிந்தவரை ஆங்கில வசனங்களைச் சரிபார்த்து (http://www.alislam.org/quran/search2/) அதைப்பற்றி மட்டுமே பேசுங்கள். தமிழ் மொழிபெயர்ப்புகளில் இருக்கும் மேலதிக விளக்கங்கள் மத நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே.

அது போல எக்காரணம் கொண்டும் அவர்கள் மதிக்கும் இறைத்தூதரை எதுவும் சொல்லாதீர்கள். நீங்கள் சொல்வது எதோ ஒரு ஹதீஸில் இருந்தால் கூட.


வலைப்பதிவில் உங்களின் பதிவின் தேவையைவிட உங்களின் குடும்பத்திற்கு உங்களின் இருப்பும் உங்களின் ஆரோக்கியமும் குழப்பமற்ற மனமும்  அவசியம்.



இஸ்லாம் ஆண்கள் ஏன் அரேபியா பாணி ஆடைகளை தமிழகத்தில் அணிவது இல்லை?
http://kalvetu.blogspot.com/2010/01/blog-post.html

Picture courtesy
http://www.freeimages.co.uk/

69 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அனைத்து விஷயங்களையும் அலசியிருக்கிறீர்கள். நன்று; நன்றி!

    உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றேன்.

    பெரியார்தாசன் ஒரு புறம் என்றால், இஸ்லாத்தை விட்டு வெளியேறிய கவிஞர் இன்குலாப் போன்றவர்களை பற்றி இஸ்லாமிய ஆதரவு பதிவர்கள், தெரியாதது போல் இருந்துவிடுகின்றனர்.

    ReplyDelete
  3. அன்பின் கல்வெட்டு,

    முதலில், முஸ்லீமாக இருப்பதற்கான ஐந்து கடமைகள்;
    1. வணக்கத்திற்குரியவன் ஒருவனைத்தவிர வேறுயாருமில்லை. முஹம்மது (ஸல்) அவனுடைய தூதர் -
    என்று நம்புவது.
    2. இறைவனை வணங்குவது.
    3. ரமலான் மாதத்தில் (பகல்) நோன்பு நோற்பது.
    4. ஜகாத் (ஏழைகளுக்கு தானம்) கொடுப்பது.
    5. (வசதியுள்ளவர்கள்) மக்காவில் இருக்கும் இறையில்லமான காபா விற்கு ஒருமுறையேனும் சென்று வருவது.
    ---------------

    சவுதி அரசோ அல்லது அங்கு வசிக்கும் ஒருவரோ உலக இஸ்லாமியர்களுக்கான 'அம்பேத்கர்' இல்லை. அங்கு இயற்றப்படுவதெல்லாம் இஸ்லாமியச் சட்டம் ஆகிவிடாது. சவுதியில் சொல்லப்பட்ட அந்த கருத்திற்கு உலகளவில் (தமிழ்நாட்டிலிருந்தும்) எதிர்ப்பு கிளம்பியுள்ளதையும் அறிந்திருப்பீர்கள்.

    இதே கருத்து இந்தியாவில் (அரசு தரப்பிலிருந்து) சொல்லப்பட்டிருந்தால், இங்கும் பலமான எதிர்ப்பு கிளம்பியிருக்கலாம். நம்நாட்டில் (முஸ்லீம்) பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு எந்த தடையும் இல்லை. எனவே இதுபோன்ற அபத்த கருத்துக்கள் வெளியிட வேண்டிய அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன். ;)

    நபிமொழி;

    'ஒரு கருப்பன் வெள்ளையனைவிடவோ, அல்லது ஒரு வெள்ளையன் கருப்பனை விடவோ, அல்லது ஒரு அரபி, அரபி அல்லாதவனை விடவோ அல்லது ஒரு அரபி அல்லாதவன் அரபியைவிடவோ உயர்ந்தவன் இல்லை உங்கள் நற்செயல்களை வைத்தே உங்கள் உயர்வு உள்ளது”.

    ------------

    சகோதரர் கோவி சொன்னது போல இதே கருத்தை யாரோ அனானி சொல்லியிருந்தால் (இதற்கு முன்பு பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது) நாம் ஒதுக்கிவிட்டு சென்றிருப்போம். இம்முறை சொன்னவர் நாம் நன்கு அறிந்த சகோதரர் என்பதாலேயே விளக்கம் சொல்ல வேண்டியிருக்கிறது. இவற்றை வெறுமனே கடந்து போக முடியாது.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ப்ளாக்கர் படுத்துகிறது... ஒரே கமெண்ட் மூன்று முறை வெளியானதால், இரண்டை நீக்கிவிட்டேன்.

    ReplyDelete
  7. பீர்,
    ஒன்று நான் சொன்னதை நீங்கள் தெரிந்தே தவிர்க்கின்றீர்கள் அல்லது பேச விரும்பவில்லை. எப்படியோ அது உங்கள் விருப்பம். ஏற்கனவே பதிவில் உள்ளதுதான், இருந்தாலும் இங்கே மேலும் அடிக்கோடிட்டு காட்ட விரும்பிகிறேன்.


    குரான் தான் எங்களின் சட்ட அடிப்படை என்று சொல்லும் ஒரு நாடு இப்படி பெண்களை அவமதிக்க, முகம்மதின் வழி என்று சில ஹதீஸ்களைக் காட்டுவதும் , இன்னும் குரான்வழிதான் நாங்கள் நடக்கிறோம் என்று சொல்வதும்
    குரான் மற்றும் நபி அவமதிப்பா இல்லையா?



    5 கடமைகள் பற்றிப் பேசலாம். ஆனால் குரான் நபி அவமதிப்பை முடிதத் பின்னர்.

    ReplyDelete
  8. //பீர் | Peer said......
    இதே கருத்து இந்தியாவில் (அரசு தரப்பிலிருந்து) சொல்லப்பட்டிருந்தால், இங்கும் பலமான எதிர்ப்பு //

    நான் நாடு பற்றிப் பேசவில்லை. இஸ்லாம் என்பதன் அடிப்படை உலக அனைத்திற்குமான ஒன்றா அல்லது குரான் ஹதீஸ் நாட்டிற்கு நாடு மாறுபடுமா?

    .

    ReplyDelete
  9. .

    //கும்மி said...
    உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றேன்.

    பெரியார்தாசன் ஒரு புறம் என்றால், இஸ்லாத்தை விட்டு வெளியேறிய கவிஞர் இன்குலாப் போன்றவர்களை பற்றி இஸ்லாமிய ஆதரவு பதிவர்கள், தெரியாதது போல் இருந்துவிடுகின்றனர்.//


    நன்றி கும்மி

    கவிஞர் இன்குலாப் மட்டும் அல்ல , எவர் இஸ்லாத்தைவிட்டு போனாலும் அதை யாரும் பெரிதாகப் பேசுவது இல்லை. ஆனால் ஒருவர் வந்துவிட்டால் இவர்களின் வரவேற்பு பதிவுகள் "நல்ல மார்க்கம் அதனால் வந்தார்" என்ற தொனியில் இருக்கும். யாராவது சென்றால் "கெட்ட மார்க்கம் என்று உணர்ந்தார்" என்று இருக்காது.

    .

    ReplyDelete
  10. //குரான் தான் எங்களின் சட்ட அடிப்படை என்று சொல்லும் ஒரு நாடு இப்படி பெண்களை அவமதிக்க, முகம்மதின் வழி என்று சில ஹதீஸ்களைக் காட்டுவதும் , ....//

    முரண் தெரிகிறதா?

    (உறுதிப்படுத்தப்படாத) ஹதீஸ்களுக்கான நம்பகத்தன்மையை நீங்களே பதிவில் தொட்டுச்சென்றுள்ளீர்கள்.

    போகட்டும், முஸ்லீம்களுக்கிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை பொதுவெளியில் வைத்து விவாதிக்க/ போராடச் சொல்கிறீர்களா?

    இப்போதும் கூட, சவுதியில் சொல்லப்பட்ட கருத்து பரவலாக பலரையும் சென்றடைந்தளவு, எதிர்ப்புகள் சென்றடைந்திருக்காது. ஆனால், முந்தைய (ஃபத்வா) கருத்துக்களுக்கு இருந்ததைவிட இதற்கு சர்ச்சை வலுத்துள்ளது, உங்களுக்கு தெரிந்திருக்கும்.

    ReplyDelete
  11. .

    அன்புள்ள பீர்,
    நான் ஏற்கனவே சொல்லியபடி நம்பிக்கையாளர்களிடம் உரையாடுவது இல்லை. அதாவது ஒரு மதத்தை நம்புபவர்களிடம் அந்த மதம் சம்பந்தமாக உரையாடுவது இல்லை. நீங்கள் கேட்டதாலும், எனது பதிவில் என்ன சொல்லியுள்ளேன் என்பதை தவறாக அடுத்தவர்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதாலும் உங்களிடம் கேள்வியை வைத்தேன் . இன்னும் அதற்கான பதில் இல்லை. நீங்கள் சொல்லியுள்ள எல்லாவற்றையும் பேசலாம் நீங்கள் இதற்கான பதில் சொன்ன பிறகு.


    உறுதிப்படுத்தப்பட்ட படாத ஹதீஸ் என்று சொல்லி நீங்கள் தவிர்ப்பதால் உங்களுக்காக மேலும் எளிதாக்கப்பட்ட நேரடிக்கேள்வி


    குரான் தான் எங்களின் சட்ட அடிப்படை என்று சொல்லும் ஒரு நாடு, "பெண்கள் ஓட்டுநர்களுக்கு முலைப்பால் கொடுங்கள்" என்று சொல்லி அதுதான் முகம்மதின் வழி என்று அதற்கு ஆதரமாக சில உறுதிப்படுத்தப்படாத (அல்லது சவூதி தவிர மற்ற நாடுகள் நம்பாத) ஹதீஸ்களை சொல்வது..... குரான் மற்றும் நபி அவமதிப்பா இல்லையா?




    ***
    உறுதிப்படுத்தப்படாத ஹதீசே ஆனாலும் "சவூதி செய்வது குரான் மற்றும் நபி அவமதிப்பா இல்லையா?" என்பதுதான் கேள்வி. இதற்கான நேரடிப் பதில் இல்லை என்றால் நீங்கள் ஏதும் சொல்ல வேண்டாம் பீர் . அது நேரவிரயமே. :-((((

    ReplyDelete
  12. மாறி கொள்கிறேன் தல!

    ReplyDelete
  13. அட்டகாசம் கல்வெட்டு. ஒவ்வொரு வார்த்தையிலும் உடன்பட முடிகின்றது.

    ReplyDelete
  14. .

    Authenticity for Arabic – English Translation found @
    http://iknowledge.islamicnature.com


    http://iknowledge.islamicnature.com refers to "Tanzil.info" for Arabic - English Translation

    Please go to
    http://iknowledge.islamicnature.com/credits.php

    Here you will see -->

    "Arabic checked and verified by Tanzil"

    This "http://tanzil.info/" is maintianed by Hamid Zarrabi-Zadeh

    Please go to http://tanzil.info/ and click on "about" (Web site top left corner )
    Here you will see more about Hamid Zarrabi

    Here are few direct links about "Hamid Zarrabi" and his Tanzil_Project

    http://cg.scs.carleton.ca/~zarrabi/

    http://tanzil.info/wiki/Tanzil_Project

    .

    ReplyDelete
  15. கல்வெட்டு சார் ,
    உங்கள் எல்லா பதிவுகளையும் ஓர இரவில் படித்து முடித்து விட்டேன்...,அவ்வளவு தகல்வல்கள் ஆதாரபூர்வமாக!!!!! வாழ்கையில் உள்ள சமுக ஏற்ற தாழ்வுகளையும் ,அது கொடுக்கும் இடைஞ்சல்களையும் பார்த்து நானும் இப்படி இருந்து விட்டேனா என்று வெட்கப்பட்டேன்...,
    கடைசியாக ஒரு வார்த்தை ,
    உங்கள் பதிவுகளை படித்தேன் ,தெளிந்தேன்

    ReplyDelete
  16. அன்பான நண்பர் திரு கல்வெட்டு,

    நீங்கள் எழுதியதை படித்தேன்!

    என் புரிதலின் படி, சுருக்கமாக நீங்கள் சொல்லவருவது, ஒரு particular மதத்தை பற்றி விமர்சனம் செய்யும் போது மட்டும் ஜாகிரதையாக (கண்ணியமாக
    என்றும் எடுத்துகொள்ளலாம்) இருக்கவும்! இல்லயென்றால் சேதமாகும் என்பதுதானே?
    அதாவது மற்ற மதங்களை கண்டபடி சதாய்க்கலாம் ஆனால் விளைவுகளை ஏற்ப்படுத்தும் மதத்தை விமர்சிக்க வேண்டாம், அது உங்களுக்கு நல்லது அல்ல!!

    இன்று போய் நாளைவா படம் climax இல் நடிகர் செந்தில், ராதிகாவின் தந்தையாக நடிக்கும் ஒருவரை (அவர் சண்டைபோடாத அப்பாவி) போட்டு சாத்துவார்! என்னை ஏனப்பா அடிக்கிறாய் என்று அவர் கேட்டதற்கு, செந்தில் கூறுவது, "உன்னை மட்டும்தான் என்னால அடிக்க முடியும்" (எதிராளிகளான பாக்கியராஜும், அவரின் நண்பர்களும் கல்லாபெட்டி சிங்காரமும் நன்றாக திருப்பி அடிப்பார்கள்) என்பது!!

    செந்தில் செய்வதன் பெயர் "பேடித்தனம்"! அது சினிமா பேடித்தனம்!!

    இது அறிவுஜீவி பேடித்தனம்!!!

    நன்றி

    நீங்க சொன்ன ஒன்றை விட்டு விட்டேன் - //விமர்சனம் என்ற‌ பெயரில் மற்றவர்கள்/பதிவர்கள் உங்களின் மத‌ நம்பிக்கையை கேலி செய்வது , சொற்களை வீசுவது தவறு. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.//
    - அப்படியா, கேட்க நல்ல இருக்கே! ......ஹோ ....சாரி, மறந்து விட்டேன் இது இந்து மத நம்பிக்கையாளர்களுக்கு பொருந்தாது! ஏனென்றால் இந்து மதம் என்பது ஒரு மதமே இல்லையே (உண்மையான அர்த்தம் - அதாவது கேலி சொன்னாலும் சேதம் செய்ய யாரும் இல்லையே - செந்தில், வேலையை தொடங்கு)

    ReplyDelete
  17. நன்றி நோ,
    உண்மைதான் இந்து என்ற ஒரு மதம் இல்லை. அதனாலேயே முனியாண்டி சாமியைப்பற்றி என்னதான் விமர்சனம் வத்தாலும் காஷ்மீர் பண்டிட்கள் கண்டு கொள்வது இல்லை. ஏன் என்று சொல்லுங்கள்.

    **

    இஸ்லாம்ம் விமர்சனம் என்பது குரானை அடிப்படையாகக் கொண்டு இருக்கலாம். தவறே இல்லை. ஏன் என்றால் இதுதான் குரான் என்று தெளிவாக உள்ளது.

    நான் சொல்வது, ஹதீஸ்களின் பேரில் செய்யும் விமர்சனம் அர்த்தமற்றது. ஏன் என்றால் எது உண்மையான ஹதீஸ் என்பது யாருக்கும் தெரியாது . அவரவர் அவருக்கு தோன்றும் ஒன்றை இதுதான் ஹதீஸ் என்கிறார். எனவே அது பயனற்றது என்பதுதான் எனது நிலை.

    குரான் அடிப்படையில் பிரித்து மேயலாம். அதில் அவ்வளவு சமாச்சாரங்கள் உள்ளது

    **

    இந்து மதம் என்று நீங்கள் நம்பும் ஒன்றின் அதிகாரபூர்வ புனித புத்தகத்தைச் சொல்லுங்கள் பிரித்து மேயலாம்.

    **

    எந்த அளவிற்கு மதம் உண்டு என்று சொல்ல உங்களுக்கு உரிமை உள்ளதோ, அப்படி நீங்கள் சொல்லும் மதத்தில் உள்ள எல்லாவற்றையும் விமர்சிக்க யாருக்கும் உரிமை உள்ளது.

    மனம் புண்படும் என்பது , உண்மைதான். மதம் இல்லை என்று சொல்லும் ஒருவர் வாழும் இடத்தில் மதம் உண்டு என்று சொல்வது அவரின் மனத்தையும் புண்படுத்தும் என்பதை அறிக. இது இருவழிப்பாதை .


    **

    "சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பிறந்தவர் அய்யப்பன்" என்று சொல்லும் போது அது எப்படி சாத்தியமாயிற்று என்று கேட்கலாம்.

    இஸ்லாமியரின் குரான் போல நீங்கள் இதுதான் எங்களின் இறைவேதம் என்று தீர்க்கமாகச் சொல்லும்போது அதை பிரித்து மேயலாம்.

    எது இந்து என்றே தெரியாத நிலையில் இந்துக்களை என்ன செய்வது?

    **

    வர்ணாசிரமம் என்பதற்கான ஆதாரங்கள் வேதம் என்ற சில புத்தகங்களில் உள்ளது. அதை பிரித்து மேயலாம். இந்துக்கும் வர்ணாசிரமத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்றால்
    வர்ணாசிரம விமர்சனம் இந்துக்களைப் பற்றியது அல்ல நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

    **

    ReplyDelete
  18. நண்பர் கல்வெட்டு,

    கூர்ந்து படியுங்கள்!

    மதம் என்பது இல்லை.

    ஏனென்றால் கடவுள் என்பதே இருக்கிறதா இல்லையா என்பதில் தெளிவோ, அல்லது அடித்து சொல்லக்கூடிய ஆதாரங்களோ அல்லது "உணர்ந்து" இருப்பன என்று சொல்லக்கூடிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலைகளோ இல்லவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்!!

    Whence the claim for a God itself is a state that is tremendously debatable as the claimed entity a.k.a God is itself unproven in all the rational modes that has been rigourously puursued, then such methods that calls for a systematic method to follow that God, a.k.a, religion is itself the most loosley made logic.

    சொல்லவருவது என்னவென்றால், புலப்படாத, தெளிவில்லாத அம்சமான கடவுளின் வழி பின்பற்றுதல் என்று சொல்லப்பட்ட வழிமுறையான மதம் என்ற ஒன்று, தெளிவின்மையின் உச்சக்கட்டம் மற்றும் ஆதாரமில்லா வழிமுறையின் உச்சக்கட்டம் என்றுதான் சொல்லவேண்டும்!!

    அதாவது, கடவுள் என்ற ஒன்றிற்கே, ஆதாரங்கள் இல்லாதபோது, அவரின் அம்சங்கள் மற்றும் செயல் வடிவங்கள் என்று சொல்லப்பட்ட எல்லாம் கடந்த நூறு வருட அறிவியலால் நீர்த்து போக செய்யப்பட்டு கொண்டிருக்கும் வேளையில், அதன் தெளிவில்லா அம்சத்தின் ஆணையிடப்பட்ட "வழிமுறைகள்" என்று சொல்லக்கூடிய "மதம்" என்பது, தெளிவின்மையின், ஆதாரமின்மையின் உச்சக்கட்டம் இல்லாமல் வேறு ஏதும் இருக்க முடியாது!!

    கூர்ந்து கவனிக்கவும்!!

    மதம் என்று சொல்லப்படும் ஆதாரமில்லாதனத்தின் இறுதி கட்ட கட்டமைப்பு, மிக முறுக்கேறி, தெளிவாக சொல்லப்ப்படும்போதுதான், ஆதாரமிலாதனத்தின் முழு வீரியம் சுடர் விடுகிறது!!
    மனிதனின் நம்பிக்கை மட்டுமே ஒரே சான்றாகக்கொண்டு, மனிதனின் வாழ்வியல் வழிமுறைகள் , நடைமுறைகள், மற்றும் ஏறக்குறைய மனிதனின் செய்யக்கூடிய எல்லாவற்றையும் தீர்மானிக்கும் வழிமுறையாக, எல்லைக்கோடுகளாக உரு பெற்றிருக்கும் இந்த மதம் எனப்படும் ஒன்று, தெளிவாக இருந்தால்தான், அது மனித சிந்தனை முறைக்கு முதல் சவாலாக இருக்கும்!

    That is, the thoroughness, precision and authority of a religion is directly proportional to the control it exerts on the Human society and the Human mind in general! More the precision of the religion, more the human is a victim to its illogical premises, lust and unproven authority!! Hence, more defined we think a religion is, more it takes out of the human endeavour and thought process. The more precise we think a religion is, the more severity with which it controls human mind and society! In short, the precision and clarity of a religion is directly proportional to the level of control that it can exert on the society and hence numbing of the human thought process. Hence it is not something that is good to be!!

    அதாவது, தெளிவானது எனப்படும் நிலைமையே மதத்தை பொறுத்த வரைக்கும், அறிவுப்பூர்வமான கட்டமைப்பிற்கு பெரும் சவாலான நிலையாகும்!! Hence more clear it is, more powerfull it is in controlling human society and similarly more diluted it becomes, more rationality seems to have seeped in.

    ஆதலால் நீங்கள் உங்கள் "மத எடை போடலை" சீர்த்தூக்கி பார்க்கவேண்டும்!!!

    (உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கலாம், என் நிலை என்னவென்று. தெளிவாக சொல்லுகின்றேன், ஒரு இந்து நாத்தீகனாக மாற நான் முழுவதும் சம்மதிப்பேன்,
    வரவேற்ப்பேன், பாராட்டுவேன், ஏனென்றால் he is going to his natural state என்ற ஒரு கருத்தில்! அதில் சந்தேகமே இல்லை!! அதே சமயம், ஒரு இந்து மதம் மாறினால், அதாவது பௌத, சமண, ஷிண்டோ மற்றும் சீகியரல்லாத மதத்திற்கு போனால் அதை நான் ஆதரிக்க மாட்டேன், ஏனென்றால், அவன் தெளிவின்மையை விடுத்து தெளிவிற்கு போகிறான், ஆனால் அந்த தெளிவு வேண்டாத தெளிவாக இருப்பதனால்!

    அதை வைத்துதான் சொல்லுகின்றேன், ஒரு நாத்திகனானவன், எதிர்ப்பு எங்கே கட்டவேண்டும் என்றால், இருக்கும் அந்த மதங்களின் வீரியத்தின்படி!! வீரியம் புரியாமல், பயத்தினால் மற்றும் முடியும் என்ற காரணத்தினால் மட்டுமே மத எதிர்ப்பில் இறங்குபவன் "பேடி" என்றே அழைக்கப்படுவான்!!)

    நன்றி

    ReplyDelete
  19. சில விசயங்களில் சவுதி அரசு அதிகப்படியான கட்டுபாடுகளை போடுவது அனைவரும் அறிந்ததே,

    உதாரணமாக தொழுகையின் போது கடைகளை மூட சொல்வது, பெண்கள் கார் ஓட்ட தடை போன்றன.

    அவைகள் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன, அந்த நாடு விரைவிலே இஸ்லாத்தின் பாதையில் திரும்பும் என எதிர் பாப்போம்.

    நீங்கள் சொல்லுவது போல மற்ற நாடுகளோ அதில் தலை இட முடியாது, அது அவர்களின் உள்நாட்டு விவகாரம்.

    மற்ற மனிதர்கள் போராட்டம் செய்தாலும் அதில் பயன் இருக்காது, அங்கு உள்ள பல உலமாக்களிடமும் பெண்களிடமும் இந்த முலைபால் விசயத்தில் எதிர்ப்பு தான் இருக்கிறதே தவிர ஆதரவு இல்லை.

    நீங்கள் இஸ்லாம் என்றால் சவுதி என்று பார்ப்பதை விட்டு குரான் ஹதிஸ் என்று பாருங்கள் சரியாக இருக்கும்.

    ReplyDelete
  20. மிக மிக நயமாக அழகாக பக்குவமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி அதை ஆசை ஆசையாக தாலாட்டுப்பாடிக்கொண்டே அள்ளி அனைத்து உச்சி முகர்ந்து முத்தமாரி பொழிந்து அமுதூட்டடும் படியான அமர்க்களமான அதிரடி கட்டுரை.

    http://gulfnews.com/news/gulf/saudi-arabia/saudi-women-use-fatwa-in-driving-bid-1.643431

    http://latimesblogs.latimes.com/babylonbeyond/2010/06/saudi-women-use-fatwa-in-driving-bid.html

    தலைப்பை மட்டும் படித்துவிட்டு நீங்கள் தந்த அந்த மேற்படி சுட்டிகள் உங்களுக்கு பூமராங்தான், கல்வெட்டு...

    தயவு செய்து அவற்றை கடைசிவரை படித்துப்பார்த்துக்கொளுங்கள். மேலும் அந்த முதல் சுட்டியில் மறுமொழிகளையும் படித்து விடுங்கள். உங்களைவிட எவ்வளவு காட்டமாக முஸ்லிம்களே எழுதி உள்ளார்கள் என்று புரிந்துவிடும்.

    மேலும்,
    'பாம்பு செத்துவிட்டது' என்று புரியும். 'செத்த பாம்பை அடிக்க' ஆயாசமாக உச்சஸ்தாயியில் தொண்டை கிழிய கத்திக்கொண்டு இருக்கிறீர்களே கல்வெட்டு.

    இதுபோன்ற கூமுட்டைகளின் கூமுட்டை பத்வாக்களை முதலில் அவர்களின் மனைவிகளுக்கோ மகள்களுக்கோ அவர்கள் அமல்படுத்துவார்களா? அப்புறம் வெளியே மற்றவர்களுக்கு சொல்லட்டும். 'கீழ்பாக்க கேஸ்'களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறீர்களே கல்வெட்டு.

    இவைகளெல்லாம் ஒன்றும் மேட்டரில்லை கல்வெட்டு. அவர்கள் வெளிநாட்டு ஊழியர்களிடம் பாரபட்சம் காட்டி அநீதியாக நடந்து அனைவர் வயித்தேரிச்சளையும் கொட்டிக்கொள்வதுதான் தலையாய பிரச்சினை.
    //குரான் தான் சவூதியின் சட்ட அடிப்படை.//---இதற்கு சரியான உதாரணம், ஒரு ஸ்மோக்கர் தான் வாங்கும் சிகரெட் பாக்கெட்டின் மீது அச்சடிக்கப்பட்ட 'உடல் நலத்திற்கு கேடானது' என்ற வாசகத்திற்கு எந்த அளவு மரியாதை கொடுப்பாரோ அதைவிட கேவலமாகத்தான் இருக்கிறது. fa சொன்னபடி, //அந்த நாடு விரைவிலே இஸ்லாத்தின் பாதையில் திரும்பும் என எதிர் பாப்போம்.//--இன்ஷாஅல்லாஹ்.

    மற்றபடி,உங்களின் இஸ்லாமிய புரிதலை விட அந்த 'அரபி பத்வா கூமுட்டைகள்' கீழேதான் உள்ளனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இஸ்லாம் பற்றி ஒரு நாத்திகர் இவ்வளவு அறிந்தும் ஆராய்ந்தும் வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. இன்ஷாஅல்லாஹ் தொடரட்டும் உங்கள் பணி. நன்றி.

    ReplyDelete
  21. // fa said...

    நீங்கள் இஸ்லாம் என்றால் சவுதி என்று பார்ப்பதை விட்டு குரான் ஹதிஸ் என்று பாருங்கள் சரியாக இருக்கும். //

    "ஹதீஸ்" என்பது இவைகள்தான் என்று அதிகாரபூர்வமாக எதுவும் வரையறுக்கப்படவில்லை.

    நான் சொன்னபடி அது நாட்டுக்கு நாடு , ஊருக்கு ஊறு வேறுபடுகிறது. உலகம் அனைத்திற்கும் ஒரே ஹதீஸ் என்று அகில உலக இஸ்லாமியர் சங்கம் அனைத்தும் சேர்ந்து ஏற்றுக் கொள்ளும்போது அதைப் பற்றிப் பேசலாம். இல்லை என்றால் "அரபி சொல்லும் ஹதீஸ் சரியில்லை" என்று நீங்களும், "இந்தியர் சொல்லும் ஹ‌தீஸ் தவறு" என்று அவர்களும் காலம் முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். :-(((

    //அந்த நாடு விரைவிலே இஸ்லாத்தின் பாதையில் திரும்பும் என எதிர் பாப்போம்.//

    சாத்தானின் கவிதைகள் சொன்ன ருஸ்டியைவிட அல்லது தூதர் முகம்மதுவின் படம் போட்ட பத்திரிக்கையைவிட .."கார் ஓட்டும் ட்ரைவருக்கு முலைப்பால் கொடுங்கள்" என்று இஸ்லாத்தின் பெயரில் சொல்வது பெரிய குற்றம் ஆயிற்றே?

    இஸ்லாத்தின் பாதையில் இல்லாமல் இப்படி குரானுக்கு களங்கம் விளைக்கும் ஒரு நாட்டை இஸ்லாமியர்கள் ஏன் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கக் கூடாது?

    .

    ReplyDelete
  22. .

    //UFO said... குரான் தான் சவூதியின் சட்ட அடிப்படை.//---இதற்கு சரியான உதாரணம், ஒரு ஸ்மோக்கர் தான் வாங்கும் சிகரெட் பாக்கெட்டின் மீது அச்சடிக்கப்பட்ட 'உடல் நலத்திற்கு கேடானது' என்ற வாசகத்திற்கு எந்த அளவு மரியாதை கொடுப்பாரோ அதைவிட கேவலமாகத்தான் இருக்கிறது. //

    UFO சவூதி குரானை அவமதிக்கிறது என்று ஒத்துக் கொள்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.

    சாத்தானின் கவிதைகள் சொன்ன ருஸ்டியைவிட அல்லது தூதர் முகம்மதுவின் படம் போட்ட பத்திரிக்கையைவிட ..கார் ஓட்டும் ட்ரைவருக்கு முலைப்பால் கொடுங்கள் என்று இஸ்லாத்தின் பெயரில் சொல்வது பெரிய குற்றம் ஆயிற்றே?

    இஸ்லாத்தின் பாதையில் இல்லாமல் இப்படி குரானுக்கு களங்கம் விளைக்கும் ஒரு நாட்டை இஸ்லாமியர்கள் ஏன் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கக் கூடாது?

    புனித்ய பயணம் செல்பவர்கள் ஏன் அந்த நாட்டை புறக்கணிக்கக்கூடாது? ருஸ்டிக்கு ஒரு நீதி , முகம்மதுவின் படம் போட்ட பத்திரிக்கைக்கு ஒரு நீதி ஆனால் ஊரில் உள்ள பெண்கள் எல்லாம் கார் ஓட்டும் ட்ரைவருக்கு முலைப்பால் கொடுங்கள் என்று இஸ்லாத்தின் பெயரில் இப்படிச் சொல்பவர்களுக்கு மயிலிறகால் தடவுவது போல விளக்கம்.

    இஸ்லாம் என்ற மதத்தை நம்பினால் நீங்கள் முதலில் புறக்கணிக்கப்படவேண்டிய இடம்,நாடு சவூதி.

    .

    ReplyDelete
  23. .

    //UFO said...
    இஸ்லாம் பற்றி ஒரு நாத்திகர் இவ்வளவு அறிந்தும் ஆராய்ந்தும் வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. இன்ஷாஅல்லாஹ் தொடரட்டும் உங்கள் பணி. நன்றி. //

    வரலாறு முக்கியம் என்பதால்...

    நான் ஆத்திகனோ, நாத்திகனோ இல்லை.
    அறிவியல் மற்றும் வரலாற்று மாணவன் அவ்வளவே.

    பலர் முகம்மதுவையும் , ஏசுவையும் கடவுளின் தூதராக அவதாரமாகப் பார்க்கும் போது நான் அவர்களை வரலாற்றில் எனக்கு முன்னோர்களாக மட்டும் பார்க்கிறேன். இதனால் தேடலும் அறிந்து கொள்ளுதலும் புனிதங்களையும் கதைகளையும் தாண்டி சிலவற்றை அறிய முடிகிறது.

    புனிதம் பக்தி என்று வரும்போது வரலாறுகள் புனிதமாகி கேள்விகேட்கமுடியா நிலைக்கு போய்விடும். :-(((

    தகவலுக்கு...
    கடவுளைக் க‌ண்டேன் ‍- விமர்சனம்
    http://kalvetu.blogspot.com/2010/03/blog-post_17.html
    ..

    ReplyDelete
  24. //இஸ்லாம் என்ற மதத்தை நம்பினால் நீங்கள் முதலில் புறக்கணிக்கப்படவேண்டிய இடம்,நாடு சவூதி.//

    இல்லை, அறிந்துகொள்ளுங்கள் சவுதி 17 லட்சம் இந்தியர்களின் பணிமனை.

    எந்த நாட்டையும் புறக்கணிக்காதீர்கள்.

    ReplyDelete
  25. ..

    fa said...

    //சவுதி 17 லட்சம் இந்தியர்களின் பணிமனை.

    எந்த நாட்டையும் புறக்கணிக்காதீர்கள். //


    ********

    ?????


    நபியின் வாழ்க்கைச் செயல்பாடுகள் அறிவுரைகள் என்று சில ஹதீஸ்களை காட்டி "ஊரில் உள்ள பெண்கள் ட்ரைவருக்கு முலைப்பால் கொடுங்கள்" என்று member of Saudi Council of Senior Scholars and adviser to the king)
    Shaikh Abdul Mohsin Bin Nasser Al Obaikan" சொன்னால் அந்த நாட்டில் இந்தியர்கள் வேலை செய்வதால் புறக்கணிக்க வேண்டாம் என்கிறீர்கள்.


    ஆனால், நபியவர்களின் படத்தைப் போட்ட ஒரு காரணத்திற்காக ஒரு நாட்டை புறக்கணிக்க இதே சவூதியும் உலக முஸ்லீம் நாடுகள் பலவும் அழைப்பு விடுத்தது.


    Denmark faces international boycott over Muslim cartoons
    http://www.timesonline.co.uk/tol/news/world/europe/article723266.ece


    Muslim boycotts of Danish products costly
    http://www.chinadaily.com.cn/english/doc/2006-02/17/content_521276.htm


    Sudanese President Urges Muslim Boycott of Denmark Over Reprinted Muhammad Cartoon
    http://www.foxnews.com/story/0,2933,332970,00.html


    ***

    உங்களைப் பொறுத்தவரை இஸ்லாம் பெயரைச் சொல்லி "ஊரில் இருக்கும் பெண்கள் ட்ரைவருக்கு முலைப்பால் கொடுங்கள்" என்று சொன்னது நபி அவமதிப்பு இல்லை அதை வேலைக்காக மன்னிக்கலாம். அல்லது நபியின் "படம் போட்ட குற்றத்துடன்" ஒப்பிடும்போது "ட்ரைவருக்கு முலைப்பால் கொடுங்கள்" என்று சொல்லுவது ஒகே...வேலைக்காகச் சகித்துக் கொள்ளலாம் என்கிறீர்கள்.

    *

    உங்களின் மனிதாபிமானத்தை த‌ஸ்லீமா, ருஸ்டி, டென்மார்க் என்றும் அகலப்படுத்துங்கள்.

    ஒருவேளை டென்மார்க்கில் அதிக இந்தியர்கள் வேலைபார்த்தால் சகித்துக்கொள்வீர்கள் போல.

    *

    வயிற்றைத் தாண்டித்தான் மதம். அதுதான் உண்மை.

    அதனால்தான் சவூதி அரசாங்கம் இப்படி சில ஹதீஸ்களைக் காட்டி பெண்களுக்கு வாகனம் ஓட்டும் சுதந்திரம் கொடுக்காமல் , அதையும் தாண்டி பால் கொடுங்கள் என்று முக்கிய அதிகாரி நபி அவமதிப்பு செய்தாலும் வேலை பாக்கனும் என்று சகித்துக் கொள்கிறீர்கள். :-(((


    ***

    நபியும் இஸ்லாமும்தான் உயிர் , வயிறு அடுத்தது என்று சொல்லும் இஸ்லாமியர்கள் டென்மார்க்கை புறக்கணித்தது போல சவூதியை புறக்கணிக்கட்டும்.

    **

    ReplyDelete
  26. கல்வெட்டு ஐயா...

    அதானே பார்த்தேன்......

    அத்தரிபாச்சா கொலக்கட்டை...

    சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

    உங்கள் முகத்தை எத்தனை நடுநிலை முகமூடி போட்டாலும் மறைக்கமுடியாமல் அத்தனையும் ஒருசமயம், தன்னாலே கிழிந்து விடுகிறது...

    உங்கள் உள்ளக்கிடைக்கையை உங்கள் ஆசையை உளறிக்கொட்டியதற்கு மிக்க நன்றி...

    தவளை தன் வாயாலே கெடும் என்றால் சும்மாவா?

    //இஸ்லாத்தின் பாதையில் இல்லாமல் இப்படி குரானுக்கு களங்கம் விளைக்கும் ஒரு நாட்டை இஸ்லாமியர்கள் ஏன் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கக் கூடாது?//

    //புனித்ய பயணம் செல்பவர்கள் ஏன் அந்த நாட்டை புறக்கணிக்கக்கூடாது?//

    //நபியும் இஸ்லாமும்தான் உயிர் , வயிறு அடுத்தது என்று சொல்லும் இஸ்லாமியர்கள் டென்மார்க்கை புறக்கணித்தது போல சவூதியை புறக்கணிக்கட்டும்.//

    ---எல்லாமே புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

    உங்கா பாச்சா பலிக்காதுடி கல்வெட்டு...

    ஏன்?

    உங்கள் குழந்தை உங்களை எதோ கோபத்தில் திட்டிவிட்டால், அவமதித்து விட்டது என்று அக்குழந்தையை புறக்கணித்து வீட்டை விட்டு துரத்திவிடுவீர்களா? அல்லது... உங்கள் அப்பா குடிகாரர் என்றால் தவறிழைத்தவர் என்று கூறி புறக்கணித்து வீட்டை விட்டு துரத்திவிடுவீர்களா?

    உங்கள் கொள்கை உங்களுக்கு... எங்கள் கொள்கை எங்களுக்கு...

    நாங்கள் நல்லறிவு கூறி நன்னடைத்தையை எடுத்துக்காட்டி திருத்தி அன்புடன் அரவணைத்து நல்ல பிள்ளையாக வளர்ப்போம் அல்லது நல்ல அப்பாவாக மாற்றுவோம்.

    (தொடரும்..1)

    ReplyDelete
  27. எத்தனையோ ஹதீஸ் திரட்டும் ஆசிரியர்கள் தாங்கள் நிறைய ஹதீஸ்களை திரட்ட வேண்டும் என்ற வேகத்தில் யூத/கிருத்துவ கைங்கர்யங்கள் திரித்துவிட்ட போலி ஹதீஸ்களை எல்லாம் உண்மை என நம்பி, அது குரான் மற்றும் பிற ஹதீஸ்களுக்கு மாற்றமாக இருப்பதை எல்லாம் ஆராய்ந்து பார்க்காமல்/அறியாமல் அவசரத்தில் தங்கள் புத்தகத்தில் இடம்பெற செய்துவிட்டனர். இதெல்லாம் பின்னால் வந்த 'ஹதீஸ்கலை வல்லுனர்கள்' மூலம் அந்த அறிவிப்பாளர் தொடரில் இருக்கும் தவறுகள், கோக்குமாக்குகள், ஹதீஸில் இருக்கும் பொருட்குற்றம் எல்லாம் தெரியவந்தன.

    அதையெல்லாம் படிக்காமல், 'ஹதீஸ் புத்தகத்தில் உள்ள எல்லாமும் சரியாகத்தான் இருக்கும்' என்று நம்பி ஆராய்ந்துபார்க்காமல் அவசர கதியில் பத்வா என்று அந்த சவூதி கூமுட்டை உலறிவிட்டார்.

    அந்த சவூதி கூமுட்டை செய்ததும் தவறுதான். அந்த டென்மார்க் கூமுட்டை செய்ததும் தவறுதான். ஆனால், முந்தையது இஸ்லாத்தை கண்மூடித்தனமாய் பின்பற்றபோய் தவ்விக்குதித்து இடறிவிழ நேர்வது.

    ஆனால், பிந்தையது(டென்மார்க்-ருஷ்டி-தஸ்லிமா)அடிப்படையையே தகர்ப்பது-அதாவது அடுத்தவன் காலை வெட்டி அவனை விழச்செய்ய அரிவாள் ஓங்குவது... இரண்டு சந்தர்ப்பங்களிலும் விழுவது மட்டுமே நேர்கிறது என்றாலும் இரண்டும் உங்களைப்போருத்தவரை ஒன்று என்றாலும் என் கண்ணோட்டத்தில், முதலாமவனை தூக்கிவிட்டு இப்படித்தவ்விக்குதிக்காமல் ஊன்றி நடக்கப்பழக அட்வைஸ் பண்ணுவேன். ஆனால், அரிவாள் ஓங்கியவனை புறக்கநிப்பேன். தண்டிக்கவேண்டி போராடுவேன்.

    முதலாவது(சவூதி) சதுரங்கத்தில் எதிரி ராஜாவுக்கு செக் வைக்கும் குருட்டு ஆவலில்-தறிகெட்ட அவசரத்தில் தன் ராணியை இழந்து நிற்பது. பிந்தியது(டென்மார்க்) எதிர்த்து ஆடுபவரையே தாக்குவது முடிந்தால் கொலையும் செய்வது. இரண்டும் ஒன்றல்ல என்பது சத்தியமாய் உங்களுக்கு புரியாது. அது, வந்நெஞ்சம் இல்லா நல்லவர்களுக்கு-நடுநிலை சான்றோருக்கு மட்டுமே புரியும்.

    மன்னிக்கவும். உங்கள் நஞ்சு கலந்த ஆசை வார்த்தைகளை கேட்டு என்னுடைய ராணியை/ராஜாவை/ஆட்டத்தை இழக்க முடியாது. அதாவது, இஸ்லாத்தின் ஒரு முக்கிய கடமையை புறக்கணித்து இஸ்லாத்தைவிட்டே முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என்ற உங்கள் ஆவல் ஈடேராது. முஸ்லிம்களின் எதிரிகளை இப்போது முஸ்லிம்கள் மிக நன்றாக அடையாளம் கண்டு கொண்டுவிடுகிரார்கள்.

    கண்ணு..கல்வெட்டு... ஹா ஹா ஹா...அந்தோ பரிதாபம் உங்கள் நிலை.

    தொடரும்-௨

    ReplyDelete
  28. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விடுமாம்...பூனைக்கு. கல்வெட்டுக்கும் அப்படித்தான் போல.

    அந்த முட்டா கூமுட்டை கேவலப்பட்டுப்போய் விட்டது என்று தெரிந்தும் சவூதி முஸ்லிம்கள் உட்பட ஒரு உலக முஸ்லிம் கூட(அந்த கூமுட்டை உட்பட) இந்த பத்வாவை கால் தூசியாக கூட மதிக்க வில்லை என்பதிலேயே விஷயம் முடிந்துவிடவில்லை... உலகம் முழுதும் இது தவறான பத்வா பின்பற்றத்தக்கதல்ல என்று அனைவராலும் சொல்லப்பட்டது. சவுதியிலேயே எதிர்க்கப்பட்டது.

    மும்போருமுறை இந்த ஹதிசை சவுதியில் வேலை பார்க்கும் தமிழகத்தை சேர்ந்த ஒரே ஒருவர் மட்டும் ஆதரிக்கப்போய் (அதை அவரே பின்பற்ற மாட்டாராம்) தொண்டியில் முஸ்லிம்களுக்கு முன்பாக நடந்த ஒரு விவாதத்தில் நொந்து நூலாய்போய் தவறுணர்ந்து அழுது மன்னிப்புகேட்டு மனம்திருந்தி வெளியேறினார். இறைவன் அவரது மன்னிப்பை ஏற்றுக்கொள்வானாக.

    சரி... நான் உங்களை ஒன்று கேட்கவா?

    'எங்காவது ஒரு கூமுட்டை வரலாற்றாசிரியரால் ஒரு புத்தகத்தில் வரலாறு தவறாக திரித்து தப்புதப்பாக கேவலமாய் எழுதப்பட்டு உள்ளது' என்று தெரிந்துவிட்டால், அது 'வரலாறு என்ற துறைக்கே நேர்ந்த மிகப்பெரிய இழுக்கு' என்று 'ஒட்டுமொத்த வரலாறையே இனி படிப்பவர்கள் எல்லாறம் புறக்கணிக்கவேண்டும்', 'வரலாறு என்ற துறையையே இனி எல்லா பலகலைக்கழகங்களும் தூக்கவேண்டும்', 'வரலாறு என்ற பாடமே இனி பள்ளிகளில்/கல்லூரிகளில் இருக்கக்கூடாது', 'இனி வரலாறு என்ற அலமாறியே எந்த நூலகத்திலும் இருக்கக்கூடாது' என்று முடிவெடுப்பீர்களா? அல்லது, அந்த கூமுட்டை ஆசிரியரை மட்டும்/அல்லது அவரின் அந்த ஒரு நூலை மட்டும் புறக்கணிப்பீர்களா? எது அறிவுடைமை?

    தொடரும்-3

    ReplyDelete
  29. கல்வெட்டு அவர்களே...நீங்களே குறிப்பிட்டபடி //Its constitution is Almighty God's Book, The Holy Qur'an, and the Sunna (Traditions) of the Prophet (PBUH).//இந்த பத்வா படி சவூதி இதை சட்டமாக்கி அதை நடைமுறைப்படுத்தி இருந்திருந்தால் சவூதி அரசை உலக முஸ்லிம்கள் எதிர்ப்பது நியாயமாக இருந்திருக்கும். அப்படி பால் குடித்த ஒரு டிரைவரையாவது காட்ட முடியுமா?

    முதலில் பால் எப்போது வரும்? அந்த கூமுட்டைக்குதான் (இல்லை.. இல்லை.. கிண்ணத்தில் கறந்துதான் குடிக்க சொன்னேன் என்று அடுத்தநாள் பல்டி அடித்தது தனிக்கச்சேரி...) அறிவில்லை என்றால் உங்களுக்குமா? தாய்ப்பால் பற்றிய உங்கள் அறிவு என்னாச்சு?
    குழந்தை பிறந்த ஓரிரண்டு ஆண்டுகள்தான் மார்பகத்தில் பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பது தெரியாதா? எனில், உயர்/மேல்நிலைப்பள்ளி/கல்லூரி செல்லும் கன்னிப்பெண்கள், குழந்தை பெரில்லாதவர்கள், குழந்தைபெர்று ஈராண்டு கடந்தவர்கள், இனி குழந்தைபெரபுடியா மெனோபாஸ் ஆன வயதான பெண்கள், குடு குடு கிழவிகள் எல்லாம் என்ன செய்வது? அவர்களுக்கெல்லாம் என்ன சட்டம்? இதுவெல்லாம் சுத்த பேத்தல் என்று உதாசீனப்படுத்தி கடந்து விட்டு அடுத்த பதிவு எழுத போயிருக்க வேண்டாமா நீங்கள் ? இதையே பிடித்து தொங்கிக்கொண்டு நிற்கும் நீங்களும் கூமுட்டையா?

    தொடரும்- 4

    ReplyDelete
  30. suppose, நாளையே அரபிப்பென்கள் காரோட்டலாம் என்ற சட்டம் நிறைவேறினால், எத்தனை லட்சம் 'வீட்டு-கார் ஓட்டுனர்கள்' வேலை இழந்து ஊர் திரும்புவார்கள் தெரியுமா?
    இந்த ஒரு விஷயத்திர்காகவும், சவூதி govt. எவ்வளவோ முயற்சி எடுத்தும் நாளுக்குநாள் வளர்ந்துவரும் விபத்துசாவு எண்ணிக்கையும் தான் சவூதி அரசயே யோசிக்க வைக்கிறது என்பதுதான் உண்மை. நம்மூர் ரோடுகளா அவைகள்?. குறைந்தது நூறு கிலோமீட்டர் வேகம்.. சராசரியாய் நூத்தி முப்பது கிலோமீட்டர் வேகம்... திடீரென்று எல்லா பெண்களும் முன் பழக்கமில்லாமல் இந்த வேகத்துக்கு காரோட்ட... என்ன ஆகும் விபத்து எண்ணிக்கை? ஒரு அரசாக இருந்து யோசித்தால் விஷயம் புரியும். பெண்கள் பழகுவதர்காகவே என்று பெண்கள் மட்டுமே டிரைவ் பண்ண என்று தனியாக சிறிது வருடங்கள் சர்வீஸ் ரோடு போடலாமா... அதற்கு எவ்வளவு இன்வெஸ்ட் செய்ய வேண்டும் என்றெல்லாம் பேச்சுவார்த்தை நடப்பது தெரியுமா? இஸ்லாமொபோபியா தாக்கிய கல்வேட்டுக்கு புரியாது.

    நான் ஏற்கனவே சொன்னேன் நீங்கள் கொடுத்த சுட்டிகளை ஒருமுறை படித்துவிட்டு வரசொல்லி... //(சவூதி அரசிடமிருந்து)If they're not granted the right to drive , the சவுதி women are threatening (the govt) to breastfeed their drivers to establish a symbolic maternal bond.//--இது செருப்பால் அடித்த மாதிரி இல்லையா?

    இதையெல்லாம் நீங்கள் படித்துவிட்டுத்தான் கழுதைபோல கத்துகிறீர்களா? ஒருவேளை படிக்காமல் வேண்டுமென்றே இருந்தாலும் எதற்கு இந்த அநியாய வெத்துவேட்டு சலம்பல்...? கல்வெட்டு அவர்களே... உங்களுக்கே இது கேவலமாய் இல்லை?

    ஏதேது.. நீங்கள் ஆர் எஸ் எஸ் ஹிந்துத்வா வெடிகுண்டு பயங்கரவாதிகளை விட அதிபயங்கரவாதியாய் இருப்பீர்கள் போலிருக்கே..! ஹராம் அலைக்க...!

    முஸ்லிம்கள் மட்டுமின்றி மறறேல்லாருமே இவரிடம் கொஞ்சம் சூதானமாய் நடந்துக்கக்ங்கப்பா...!

    That's all....

    ReplyDelete
  31. //எத்தனை லட்சம் 'வீட்டு-கார் ஓட்டுனர்கள்' வேலை இழந்து ஊர் திரும்புவார்கள் தெரியுமா?
    இந்த ஒரு விஷயத்திர்காகவும், சவூதி govt. எவ்வளவோ முயற்சி எடுத்தும் நாளுக்குநாள் வளர்ந்துவரும் விபத்துசாவு எண்ணிக்கையும் தான் சவூதி அரசயே யோசிக்க வைக்கிறது என்பதுதான் உண்மை.//

    :-))))))

    ReplyDelete
  32. ’U’nidentified ’F’ighting ’O’bject
    அரபியில் ட்ரைவர் வேலை செய்து கொண்டிருப்பாருன்னு நினைக்கிறேன் கும்மி! அதான் நிறைய பேருக்கு வேலை போயிரும்னு கவலைப்படுறார்!

    ReplyDelete
  33. //U’nidentified ’F’ighting ’O’bject//

    அது Unidentified அல்ல Identifiedதான்.

    அதிரை பாரூக் எனப்படும் UFO எனப்படும் புள்ளி ராஜா.

    ReplyDelete
  34. //அதிரை பாரூக் எனப்படும் UFO எனப்படும் புள்ளி ராஜா.//

    ஆள் பிடிக்கும் அதிரை ஃபாருக்குன்னு கிழிச்சிருந்தாங்களே ஒரு ப்ளாக்குல, அந்த ஃபாருக்கா!?

    ReplyDelete
  35. //ஆள் பிடிக்கும் அதிரை ஃபாருக்குன்னு கிழிச்சிருந்தாங்களே ஒரு ப்ளாக்குல, அந்த ஃபாருக்கா!?//

    ஆம்! அதே ஃபாருக்தான். மெயில் அனுப்பும் வேலைக்கு ஃபாருக். பின்னூட்டங்களுக்கு UFO. காப்பி பேஸ்ட் வேலைக்கு புள்ளி ராஜா.

    ReplyDelete
  36. //நபியும் இஸ்லாமும்தான் உயிர் , வயிறு அடுத்தது என்று சொல்லும் இஸ்லாமியர்கள் டென்மார்க்கை புறக்கணித்தது போல சவூதியை புறக்கணிக்கட்டும்.//

    ஹா ஹா நீங்க ஏன்னா மூச்சி விடாம பேசுறிங்க. உங்களுக்கு என்ன பிரச்சன, நீங்க பேசுறதுல எதாவது லாஜிக்க இருக்கா? டென்மார்க் உருவ படம் போட்டான் அதான் முஸ்லிம் நாடு எல்லாம் புறக்கனுசுச்சு. சவுதில உள்ளவங்கள முலைப்பால் கொடுக்க சொன்னா, அது அவங்க உள்நாட்டு பிரச்சன, வேற நாட்டுல உள்ள பொன்னையா சொன்னான்.

    இந்தியாவுல யாரு வேணுன்னாலும் யாருகூட வேணுன்னாலும் படுதுக்கலமுன்னு தான் சட்டம் இருக்கு. அத சவுதி கேட்ட நீங்க என்ன சொல்லுவிங்க. முலைபாலோட இது கேவலம் தானே.

    உளராம போயி தண்ணிய குடிங்க.

    ReplyDelete
  37. //இந்தியாவுல யாரு வேணுன்னாலும் யாருகூட வேணுன்னாலும் படுதுக்கலமுன்னு தான் சட்டம் இருக்கு.//


    சவுதியில ஒரு பெண் விருப்பமில்லாமல் அடுத்த ஆடவன் வாயில் ...யை திணிப்பதற்கும், விருப்பபட்டு ஒரு பெண் இன்னொரு ஆடவன் கூட படுப்பதற்கும் வித்தியாசம் தெரியாதா உங்களுக்கு!

    விட்டா இந்தியாவில் படுத்தே ஆகனும்னு சட்டம் இருக்குன்னு சொல்விங்க போலயே!, அப்படி நினைச்சு எங்கேயும் போயிராதிங்க, முழுசா வெட்டி விட்ருவாங்க!

    :)

    ReplyDelete
  38. //சவுதியில ஒரு பெண் விருப்பமில்லாமல் அடுத்த ஆடவன் வாயில் ...யை திணிப்பதற்கும், விருப்பபட்டு ஒரு பெண் இன்னொரு ஆடவன் கூட படுப்பதற்கும் வித்தியாசம் தெரியாதா உங்களுக்கு!//

    அது மாதிரி சவுதியில எங்கையும் நடந்தது இல்ல, நடந்தாலும் வெட்டிடுவாங்க, ஆனா இந்தியால அப்டியா?

    கல்யாணம் ஆனாலும் பரவ இல்ல, விருப்பம் இருந்தா யார் கூட வேணுன்னாலும் படுத்துக்கலாம்!!

    conditionஅ இருந்தா கெட்ட நாடு, fuck பண்ண அனுமதி இருந்தா நல்ல நாடு, என்னைய நீங்க?

    ச்சே, இந்த பதிவுக்கு வந்து என்னோட டைம் வேஸ்டு ஆயிட்டு.

    போங்கடா நான் வேற பதிவுக்கு போறேன்.

    ReplyDelete
  39. //conditionஅ இருந்தா கெட்ட நாடு, fuck பண்ண அனுமதி இருந்தா நல்ல நாடு, என்னைய நீங்க? //

    இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மனைவி/கணவன் உயிரோடு இருக்கும் போது மறுமணம் செய்தால் குற்றம், அதில் ஒருவர் மற்றொருவருடன் உறுவு கொண்டது உறுதியானால் விவாகரத்து வாங்கி கொள்ளலாம்!

    குரான் சட்டம் என்ன சொல்லுது தெரியுமா!? கட்டிய மனைவிகள்!? அல்லாமல் அடிமைகளுடனும் உறவு கொள்ளலாம்!

    போடா, நீ போனா மயிராச்சு!

    ReplyDelete
  40. //போடா, நீ போனா மயிராச்சு!//

    என்ன நீங்க பொசுக்குன்னு இப்டி சொலிடிங்க.

    நா என்ன சொலவறென்ன, பதிவு போடுரவரு இது மாதிரி சொத்த பதிவா போட்டு டைம் வேஸ்ட் பண்றாருன்னு தான். ஒவ்வொரு நாட்டு சட்டத்து உள்ளரையும் போனோன்ன நெறைய இருக்கு,

    நீங்க போடுறமாதிரி எதாவது ஒரு லாஜிக் இருக்கணும்.அந்த ஆல பாதா எதோ RSS கைக்கூலி போல இருக்கு.

    ReplyDelete
  41. //அந்த ஆல பாதா எதோ RSS கைக்கூலி போல இருக்கு.//


    எப்படி இப்படியெல்லாம் ரு பதிவை மட்டும் பார்த்து முடிவு பண்ண முடியுது!
    நாங்க இந்து மதத்தை விமர்சிக்கும் பொழுது குல்லா பார்ட்டி ஆயிர்றோம், இஸ்லாத்தை கேள்வி கேட்டா ஆர்.எஸ்.எஸ் ஆயிர்றோம்!
    தக்காளி நாங்க மதமே இல்லைங்கிறோம், எங்களை ஆளாளுக்கு மதம் மாத்துறானுங்க!

    ReplyDelete
  42. //எப்படி இப்படியெல்லாம் ரு பதிவை மட்டும் பார்த்து முடிவு பண்ண முடியுது!
    நாங்க இந்து மதத்தை விமர்சிக்கும் பொழுது குல்லா பார்ட்டி ஆயிர்றோம், இஸ்லாத்தை கேள்வி கேட்டா ஆர்.எஸ்.எஸ் ஆயிர்றோம்!தக்காளி நாங்க மதமே இல்லைங்கிறோம், எங்களை ஆளாளுக்கு மதம் மாத்துறானுங்க//


    ஓஹோ, அப்ப அவரு உங்க கூட்டமா? சாரி மன்னிச்சிக்கோ கல்வெட்டு தலைவா RSS பக்கிகளோட உங்கள சேத்ததுக்கு.

    ReplyDelete
  43. .


    //fa said...

    ஒவ்வொரு நாட்டு சட்டத்து உள்ளரையும் போனோன்ன நெறைய இருக்கு,//

    எந்த நாடும் தங்களின் சட்டங்கள் அனைத்திரற்கும் அடிப்படை குரான் என்று சொல்லவில்லை. அப்படிச் சொல்லிக் கொண்டு நபி அவமதிப்பு செய்வது சவூதி மட்டுமே.

    .

    உங்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தையைத் தவிர சொல்ல ஏதும் இல்லை.


    *

    ReplyDelete
  44. //எந்த நாடும் தங்களின் சட்டங்கள் அனைத்திரற்கும் அடிப்படை குரான் என்று சொல்லவில்லை. அப்படிச் சொல்லிக் கொண்டு நபி அவமதிப்பு செய்வது சவூதி மட்டுமே.//

    ஹேலோ, நீங்க இஸ்லாத பத்தி பேசுரிங்களா இல்ல சவுதி பத்தி பேசுரின்களா,

    இஸ்லாத பத்தி கேட்ட என்கிட்டே பதில் இருக்கு, சவுதி பத்தி கேட்டா இல்ல.

    நீங்க ராஜனோட ரொம்ப மொக்கையா இருக்கீங்க..

    ReplyDelete
  45. குரான் தான் எங்கள் சட்டம் என சொல்லும் சவுதி பத்தி பேசுறார்!

    ReplyDelete
  46. //அது மாதிரி சவுதியில எங்கையும் நடந்தது இல்ல//

    fa அவர்களின் கவனத்திற்கு,
    கீழே கொடுக்கப்பட்டுள வலைத்தொடர்பை பாருங்கள்,

    1. ". . .அரேபியாவில் (சவூதி உட்பட) விபசாரம் செய்ய அரேபியர்க்கு வாய்ப்பே இல்லை . . ."

    http://sivacalgary.blogspot.com/2006/04/6_05.html

    2. ". . . சவூதி எல்லையை விமானம் தாண்டியவுடன் முகமூடிகளைக் களைந்து ஆங்கிலப் பட கவர்ச்சி கன்னிகள் ரேஞ்சுக்கு வலம் வந்து ஜொள் விருந்துப் படைப்பர் . . . "

    http://sivacalgary.blogspot.com/2006/04/8.html

    3. " . . .பெண்களுக்கு தனியாக அடையாள அட்டை கிடையாது. அவர்கள் அவர்களின் கணவருடன் தான் செல்ல வேண்டும். ஏனென்றால் அதுதான் அவர்களுக்கு மிகுந்த பாதுகாப்பு.

    யாரிடமிருந்து? விபசாரத்தை கனவிலும் நினைக்காத பரிசுத்த தூயவர் அரேபியரிடமிருந்து.

    பள்ளிக் குழந்தைகளின் பேருந்து நாங்கள் தங்கியிருந்த அடுக்கு மாடி கட்டிததின் எதிர்புறம் வரும். அவர்களை அழைத்து வர இந்த கட்டிடத்தில் உள்ள இந்தியப் பெண்மணிகள் சேர்ந்து நிற்பார்கள். குழந்தைகள் வந்தவுடன் அவர்களை அழைத்து வருவார்கள். ஒருமுறை என்னுடைய மகன் பஸ்ஸை தவறவிட்டுவிட்டான். அடுத்த பஸ்ஸில் வரக்கூடும் என என் மனைவி தனியாக நிற்க நேரிட்டது.

    என் மனைவி இஸ்லாமிய முறையில் உடையணிந்து தலையில் முக்காடுக் கட்டி நின்றிருந்தும், தனியாக நிற்கும் ஒரு இந்திய அடிமைப் பெண்ணை ஒருவர் இல்லை 4/5 பேர்கள் காரை நிறுத்தி அழைதிருக்கிறார்கள். இவ்வளவும் அடுத்த பஸ் வரும் 15 நிமிடத்திற்குள். இது நடந்த நேரம் பகல் 12 மணிக்கு நடந்த இடம் நகரின் பிரதான சாலையில்.

    . . . "

    http://sivacalgary.blogspot.com/2006/05/101_16.html

    மேலே சொன்னது, சவுதி அரேபியாவில் விபச்சாரம் போன்றவைகளுக்கு வாய்ப்புகள் இல்லை என்று சொன்ன உங்கள் கூற்றில் உள்ள முரண் பாட்டிற்கே,

    வழக்கம் போல ஒத்துக்கொள்ள மாட்டீர்கள் என்றால் உங்கள் விருப்பம்.

    ReplyDelete
  47. .

    //fa said...

    ஹேலோ, நீங்க இஸ்லாத பத்தி பேசுரிங்களா இல்ல சவுதி பத்தி பேசுரின்களா, //


    குரான் தான் சவூதியின் சட்ட அடிப்படை.

    http://www.saudiembassy.net/about/country-information/laws/The_Basic_Law_Of_Governance.aspx


    Article 1:
    ---------
    The Kingdom of Saudi Arabia is a sovereign Arab Islamic State. Its religion is Islam. Its constitution is Almighty God's Book, The Holy Qur'an, and the Sunna (Traditions) of the Prophet (PBUH). Arabic is the language of the Kingdom. The City of Riyadh is the capital.

    Article 45:
    -----------
    The Holy Qur'an and the Sunna (Traditions) of God's Messenger shall be the source for fatwas (religious advisory rulings).

    Article 48:
    ----------
    The Courts shall apply rules of the Islamic Sharia in cases that are brought before them, according to the Holy Qur'an and the Sunna, and according to laws which are decreed by the ruler in agreement with the Holy Qur'an and the Sunna.


    குரான் எங்களின் சட்ட அடிப்படை.
    எங்கள் ஆட்சி குரான் வழி நபி வழி என்று சொல்லி நபி அவமதிப்புச் செய்யும் சவூதியை இஸ்லாமியரக்ள் புறக்கணிக்க வேண்டும் என்கிறேன்.

    டென்மார்க் செய்த நபி அவமதிப்பைவிட சவூதி என்ற நாடு செய்யும் நபி அவமதிப்புச் செயல்கள் அதிகம் என்கிறேன்.

    வேலை செய்வதாலிம் பிழைப்பு ஓடுவதலூம் புறக்கணிக்க முடியாது என்று சொல்லிவிட்டீர்கள். மேலே சொல்ல ஒன்றும் இல்லை.

    //ரொம்ப மொக்கையா இருக்கீங்க..//

    நீங்கள் நல்ல பதிவாகத் தேடிப் படிக்கலாம்.


    **

    ReplyDelete
  48. //இஸ்லாத பத்தி கேட்ட என்கிட்டே பதில் இருக்கு, சவுதி பத்தி கேட்டா இல்ல.//

    அப்படீன்னா, நீங்க

    //அது மாதிரி சவுதியில எங்கையும் நடந்தது இல்ல, நடந்தாலும் . . . //

    ன்னு சவூதிய மேற்கோள் காட்டக்கூடாது.

    ReplyDelete
  49. அரேபியாவில் மிகவும் பரிதாபத்துக்குறியவர்கள் அங்கே வீட்டு வேலைக்கு வரும் நம் ஏழை சகோதரிகள். இவர்களில் இந்தியர் அதிகம் இருப்பதில்லை. இலங்கை, தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு சகோதரிகள்தான் அதிகம். இவர்களிடம் நான் நேரிடையாகப் பேசியதில்லை. இவர்கள் படும் வேதனைகளை அறிய எனக்கு வாய்ப்புஇருந்ததில்லை. ஒரு முறை என் மனைவி இந்தியாவிற்க்கு சென்றிருந்த போது நான் கம்பெனி க்ள்பில் உணவருந்திக் கொண்டிருந்தேன். அங்கே வந்த என் அரேபிய நண்பர் ஒருவர் " என்ன ஹோட்டல் சாப்பாடு?" என்றதற்கு "மனைவி ஊரில் இல்லை" என்றேன். அதற்கு அவர் "நீ எனக்கு நல்ல நண்பர் அதனால் என் வீட்டு பிலிப்பினோ வேலைக்காரியை அனுப்பி வைக்கிறேன் என்றார். "பிலிப்பினோ உணவு எனக்குப் பிடிக்காது" இது நான். "அடே சாப்பட்டிற்க்கு இல்லையப்பா, 'அதற்கு'" என்று கண்ணைச் சிமிட்டானார் என் உயிர் நண்பர். "இதெல்லாம் சகஜமப்பா.நாங்கள் இவ்வளவு செலவு செய்து அவர்களை இங்கே அழைத்து வந்து சம்பளம் கொடுத்து சாப்பாடு போட்டு வைத்திருப்பது எதற்காக. இவர்களை என்ன வேண்டுமானலும் செய்ய எங்களுக்கு உரிமை இருக்கிறது. எங்கள் அரேபிய நண்பர்கள் இவர்களை மாற்றிக் கொள்வோம்" என்று ஒரு குற்ற உணர்வே இல்லாமல் பேசிக் கொண்டிருந்தார். இவர் அமெரிக்காவில் 5 வருடம் தங்கிப் படித்தவர் பண்பாளர். இவரே இப்படியென்றால், மற்றவர்களிடம் இச்சகோதரிகளின் நிலைமை?

    http://sivacalgary.blogspot.com/2006_03_01_archive.html

    ReplyDelete
  50. //வழக்கம் போல ஒத்துக்கொள்ள மாட்டீர்கள் என்றால் உங்கள் விருப்பம்.//

    சவுதி யா பத்தி பேசி உபயோகம் இல்லன்னு தான் சொல்றேன்.

    //வழக்கம் போல ஒத்துக்கொள்ள மாட்டீர்கள் என்றால் உங்கள் விருப்பம்.//

    வாய்ப்பே இல்ல.

    //வேலை செய்வதாலிம் பிழைப்பு ஓடுவதலூம் புறக்கணிக்க முடியாது என்று சொல்லிவிட்டீர்கள். மேலே சொல்ல ஒன்றும் இல்லை.//

    வேல செஞ்ச காசு தரானா வாங்கிகிட்டு வரவேன்டியதான். சும்மா பெனாதுரதுனால புரோஜனம் இல்ல. அவன் ஊர்ல எல்லாருமே அப்டிதான். ஸ்டிரைக் பண்ணனும்னு ஆசையா இருக்கா இந்தியா வந்ததும் பண்ணு.

    //நீங்கள் நல்ல பதிவாகத் தேடிப் படிக்கலாம்.//

    அதாவது சின்னதுலருந்து பழகிட்டு போ ன்ன போமாட்டேன். அண்ணன் சொல்லு.

    //ன்னு சவூதிய மேற்கோள் காட்டக்கூடாது.//

    நீங்கலாம் அதிகமா சவுதி பத்தி பேசுனதுனாலத்தான் நானும் பேசுனேன், சவுதி ய பத்தி பேசுறதுக்கு முன்னாடி நம்மஊரு எப்டி இருக்குன்னு தெரிஞ்சிக்க சொல்றேன்.

    நீங்க பேசுலன்னா அவேங்கள பத்தி நானும் பேச மாட்டேன்.

    ReplyDelete
  51. //இவர் அமெரிக்காவில் 5 வருடம் தங்கிப் படித்தவர் பண்பாளர். இவரே இப்படியென்றால், மற்றவர்களிடம் இச்சகோதரிகளின் நிலைமை?//

    ஒரே குஷ்டமப்பா. அமெரிக்கால படிச்சவன் அப்பறம் எப்டி இருப்பான். அந்த அரபி ஒரு பக்கி அது பிரெண்டா இருக்குற எழுதுனது ஒரு பக்கி. இப்டி எல்லா டுபாகூரையும் வச்சு ஒரு கதை எழுதுறவங்கால என்ன சொல்றது.

    ஒன்னும் சொல்ல முடியாது, நடத்துங்க நடத்துங்க.

    ReplyDelete
  52. சரி கல்வெட்டு,

    சவுதி யா பத்தி பதிவு போடுறதுக்கு முன்னாடி நித்யானந்தா பத்தியோ இல்ல பிரா மானந்தா பத்தியோ ஒரு பதிவு போட்டுருதன்னா சரி உங்களுக்கு கொஞ்சம் அக்கற இருக்குன்னு நெனக்கலாம்,

    எடுத்ததுமே சவுதி பத்தி போட்ட RSS ன்னு தான் சொல்வாங்க. அடுத்தவன சொல்றதுக்கு முன்னாடி நம்ம நாட்ல உள்ள பிரச்சனையையும் கொஞ்சம் நெனச்சி பாருங்கபா.

    ReplyDelete
  53. கல்வெட்டு...
    //நன்றி UFO !//என் எல்லா கேள்விகளுக்கும் இப்படி மிக விலாவாரியாய் விடை அளித்ததுக்கு மகிழ்ச்சி.

    ஹிந்துமதம் பற்றி விமர்சிக்காததுக்கு என்ன காரணம் சொன்ணீர்களோ, என்ன காரணம் இல்லை என்பதால் விமர்சிக்காமல் கடந்தீர்களோ, அதே காரணங்கள் கிருத்துவ மதத்துக்கு இருந்தாலும் அதற்கு வேறு ஒரு சப்பைக்கட்டு கட்டிவிட்டு மிக கள்ளத்தனமாக இஸ்லாம் மதத்தை விமர்சிக்க தவ்வீணீர்களே... அப்போதே தெரிகிறது உங்கள் உள்நோக்கம்-இஸ்லாமொபோபியா என்று...

    இஸ்லாத்தை ஒன்றும் குறை சொல்லமுடியாது என்பதால் சவுதியை கிழித்துக்காயப்போடுகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. சவுதிக்காரனை திட்டினால் முஸ்லிம்கள் கோபப்படுவார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டீர்கள். அந்தோ பரிதாபம்.

    எந்த முஸ்லிமும் சவூதி செய்யும் தப்பை நியாயப்படுத்தமாட்டான். அவனென்ன.. எந்த நாட்டுக்காரன்/ எவன் செய்யும் தப்பையும் நியாயபடுத்த மாட்டான். சவுதியை இன்னும் நன்றாக
    திட்டி அவர்களின் எல்லா குறைகளையும் தேடி எடுத்து கண்டபடி கிழித்து துவைத்து தொங்கவிடுங்கள். மகிழ்ச்சியே.

    அதே நேரம் சவுதியின் அனைத்து சட்டங்களுக்கும் குரான் மற்றும் ஹதீஸ் தான் ஆதாரம் என்று யாரை குறைசொல்கிறீர்களோ அவர்களின் வெப்சைட்டையே அதற்கு ஆதார சுட்டியாக வேறுகொடுத்து (!?அதைத்தானே குற்றம் சொல்கிறோம்!?) மொக்கைத்தனமாய் திரும்ப திரும்ப பழைய தேய்ந்த ரேக்கார்டையே ஓட்டாதீர்கள்.

    புரியவில்லை என்றால், உதாரணத்துக்கு...

    நீங்கள் சவுதிக்கு வேலைக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நம் ஏர்போர்ட்டிலேயே அவன் ஆட்கள் உங்களை விசா இருக்கான்னு கேட்பான். 'விசா- இது எந்த குரானில்/ஹதீஸில் இருக்கிறது' என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.
    ஏனெனில், சவுதியின் அனைத்து சட்டங்களுக்கும் குரான் மற்றும் ஹதீஸ் தான் ஆதாரம் என்று திரும்ப திரும்ப பழைய தேய்ந்த ரேக்கார்டை ஓட்டுவது நீங்கள்தான்.

    அப்புறம் அங்கேபோய் சேர்ந்தவுடன், IMMIGRATION/CLEARANCE-இல் பாஸ்போர்ட் கேட்பான். "IMMIGRATION/CLEARANCE/பாஸ்போர்ட்?"-இதெல்லாம் எந்த குரான்/ஹதீஸ்?.

    வெளியே வந்தால், வாடகை டாக்சி பிடிப்பீர்கள். அதன், நம்பர்பிலேட், இன்சூரன்ஸ், ஓட்டுனரின் லைசன்ஸ், வலப்பக்கம் ஒட்டவேண்டும் என்ற ரோடு ரூல்ஸ், ட்ராபிக் பச்சை/சிகப்பு/மஞ்சள் விளக்குகள், வேகத்தடை, வேக கட்டுப்பாட்டு மூன்று லைன்கள் ரோட்டில், செக்போஸ்ட், ஓவர்ஸ்பீடு ரேடார் செக், இதெல்லாம் எந்த குரான்/ஹதீஸ்?

    அப்புறம் வேலைக்கு சேர்ந்தால் அடையாள அட்டை(இக்காமா) போட ஐநூறு ரியால், (வருடா வருடம் ரிநிவளுக்கு ஐநூறு ரியால் அழவேண்டும்...) எட்டு மணிநேர வேலை உள்ளிட்ட லேபர் லாக்கள், கட்டாய யூனிபார்ம், ஹெல்மட், ஷூ, கண்ணாடி, கையுறை... டிரான்ஸ்போர்ட் அல்லவன்ஸ், போனஸ், ரவுண்ட் தெ கிளாக் ஷிப்ட் டூட்டி, ஓவர்டைம், ஹாலிடே வொர்க், இத்யாதி எல்லாம் எந்த குரான்/ஹதீஸ்?

    இன்னின்ன வேலைக்குத்தான் குடும்பத்தை கூட்டியாரலாம், ஊரில் உள்ள குடும்பத்தில் பேச ஏகப்பட்ட தொலைபேசி, அலைபேசி, இன்டர்நெட், இத்யாதி பற்றின ரூல்ஸ், உங்கள் பாஸ்போர்ட் உங்கள் கம்பெனி ஒனரிடம்தான் இருக்கும், உங்கள்க்கு ஒரு சம்பளம், அதேவேலையை பார்க்கும் சவுதிக்கு இருமடங்கு/மும்மடங்கு சம்பளம், உங்கள்க்கு குறைந்த நாட்கள் ஈத் விடுமுறை; சவுதிக்கு அதிகநாள்... இதெல்லாம் எந்த குரான்/ஹதீஸ்?

    to be continued...

    ReplyDelete
  54. continues...
    அப்புறம் ஒருவருடம் கழித்துதான் குடும்பத்துடன் கொஞ்சி குலாவ ஒருமாசம் விடுப்பு அனுமதி என்பது எந்த குரான்/ஹதீஸ்?

    விடுமுறை போகவேண்டுமானால், எக்சிட்-ரி என்ட்ரி ஸ்டாம்பிங் (இருநூறு ரியாலுக்கு அழவேண்டும்...எப்போது ஊர் போனாலும்) விமான நிலையத்தில் நாப்பது கிலோதான் உச்சவரம்பு, அதுக்கு மேலேன்னா அநியாய டூட்டி... 'இதெல்லாம் எந்த குரானில்/ஹதீஸில் இருக்கிறது' என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.
    ஏனெனில், சவுதியின் அனைத்து சட்டங்களுக்கும் குரான் மற்றும் ஹதீஸ் தான் ஆதாரம் என்று திரும்ப திரும்ப பழைய தேய்ந்த ரேக்கார்டை ஓட்டுவது நீங்கள்தான்.

    ஆதாரம் தர முடியவில்லை என்றால், குரான்/ஹதீஸ் மட்டுமே சவூதி சட்டங்கள் இல்லை என்பதை நீங்கள் மற்றும் உங்கள் ஜால்ராக்கள் ஒத்துக்கொள்ள வேண்டும்.

    அப்படி ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் மனிதர்கள் தானாக போட்ட சட்டங்களுக்கு இஸ்லாம் பொறுப்பேற்காது என்றுதான் நியாயப்படுத்தப்பட வேண்டும். மேலும், சவுதியில் போடப்படும் சட்டங்கள் மற்ற நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு பொருந்தாது என்றும் அறிந்து புரிந்து தெளிந்து பதிவு போடுங்கள்.
    இல்லையென்றால்........
    ஒரு பிள்ளைக்கு மேலே பெக்ககூடாது என்று சீனா சொன்னபோது இங்குள்ள கம்யுநிஸ்டுகலேல்லாம் ஏன் எதிர்க்க வில்லை என்று கேட்டிர்களா? அவர்கள் கம்யுநிசத்துக்கு மாறாக தற்போது முதலாளித்துவத்தில் கொஞ்சம் கொஞ்சம் ஆக சரணாகதி அடைகிரார்களே. இங்குள்ள கம்யுநிஸ்டுகலேல்லாம் ஏன் எதிர்க்க வில்லை என்று கேட்டிர்களா?

    புத்த மதத்து கொள்கைக்குக்கு எதிராக கொலை செய்து கோர தாண்டவம் ஆடிய/ஆடும் சிலோன் புத்த அரசை இங்குள்ள புத்தர்கள் எதற்கு போராட்டம் அறிவித்து எதிர்க்கவில்லை என்று கேட்டீர்களா?

    ஹிந்து அரசை கவிழத்து கிட்டத்தட்ட ஒன்றுமில்லாமல் ஆக்கி மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் நேப்பாளத்தில் அட்சியைப்பிடித்தார்களே.. எந்த இந்திய ஹிந்துவாவது அதனை ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்டீர்களா?

    ஒரு கன்னத்திள் அறைந்தால் மருகன்னத்தைக்காட்டு என்ற கிருத்துவ கொள்கைக்கு எதிராக ஹிட்லர், முசொலினி, சிலுவைப்போர் இத்தாலிய, ரோம, வாடிகன் போப்கள் முதல் முந்தைய அமெரிக்க ஜனாதிபதி புஷ் போன்றவர்களின் அக்கிரம அராஜகத்தை எந்த இந்திய கிருத்துவர்கலாவது கண்டித்தீர்களா என்று கேட்டீர்களா?

    யூதநாடு இஸ்ரேலின் அக்கிரமத்தை இந்திய யூதர்கள் எதிர்க்க வேண்டும் என்று சொன்னீர்களா?
    என்று உங்களைப்போலவே நானும் அறிவுப்பூர்வமாய் கேட்க வேண்டியிருக்கும்....
    பரவாயில்லை... கல்வெட்டு... இனிமேல் வரிசையாக எல்லாரையும் கேட்க ஆரம்பியுங்கள். குருட்டுத்தனமாய் திட்டுவதிலும் சமநீதி வேண்டாமா?

    over...

    ReplyDelete
  55. .
    UFO,
    உங்களுடம் பேசுவதற்கான காரணம் ரொம்ப‌ எளியது.

    1.சவூதியின் சட்டம் குரானின் அடிப்படி அதை நீங்கள் ஏற்காவிட்டாலும் அவர்களின் சட்டம் அப்படித்தான் உள்ளது. சவூதியின் சட்டங்கள் குரான் அடிப்படை இல்லை என்றால் அவர்கள் குரான் பெயரைப் சட்ட அடிப்படை என்பதில் பயன்படுத்தக்கூடாது. அது குரானுக்கு களங்கம்.

    2.டென்மார்க் நாட்டு பத்திரிக்கைக்காக, டென்மார்க்கை புறக்கணிக்க விடுத்த அழைப்பைவிட இவர்களைப் புறக்கணிக்க‌ அதிக காரணம் உள்ளது.இவர்கள் குரானை சட்ட அடிப்படையாக வைத்துக்கொண்டு மனித நேயம் இல்லாமல் அவமதிப்பு செய்பவர்கள்.

    3.மனிதர்களின் பிழைப்புவாத காரணங்கள் அல்லது ஏதோ ஒரு காரணம் சவூதியை புறக்கணிக்க முடியாமல் இருக்கலாம். அது மதத்தை இரண்டாவதாக பொழுது போக்காக‌ கருதுபவர்களுக்கு அல்லது சீரியசாக எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு.

    4.மதம் உயிரினும் மேலானது என்று சொல்பவர்களுக்கு மட்டுமே எனது கேள்வி.

    5.எது நடந்தாலும் அல்லது பல காரணங்களால் சவூதியை புறக்கணிக்க முடியாது என்றால் அது உங்கள் உரிமை உணர்வு.



    **

    என்னைப்பற்றி நீங்களே நிறையச் சொல்லி விட்டீர்கள்.

    நானாக உங்களிடன் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளாவிடில், நீங்கள் என்னைப் பற்றி நீங்களாகவே என்ன நினைத்துக்கொண்டாலும் அது பற்றிய அக்கறை எனக்கு சிறிதளவும் இல்லை.

    மன்னிக்கவும்.

    **


    .

    ReplyDelete
  56. //5.எது நடந்தாலும் அல்லது பல காரணங்களால் சவூதியை புறக்கணிக்க முடியாது என்றால் அது உங்கள் உரிமை உணர்வு.//

    புறக்கணிக்கிறதுன்னு சொன்ன எந்த வகையிலன்னு தெரிஞ்சிக்கலாமா?

    ReplyDelete
  57. // fa said...

    புறக்கணிக்கிறதுன்னு சொன்ன எந்த வகையிலன்னு தெரிஞ்சிக்கலாமா?
    //


    fa,
    நீங்கள் முதலில் பேசுபொருள் பற்றிப் பேச வேண்டும்.

    நபி பற்றிப் பேசினால் நித்யானந்தவைச் சொன்னாயா? என்பது
    இஸ்லாம் பற்றிச் சொன்னால் வர்ணாசிரமம் பற்றிச் சொன்னாயா? என்று கேட்பது ஒப்பீட்டளவில் சரிதான் . ஆனால் இப்படிக் கேட்கும் முன் ஆறு ஏழு வருடங்களாக நான் என்னதான் சொல்லிவருகிறேன் என்பதை அறிந்து கொண்டு பேச வேண்டும். அப்படி இல்லமால் நீங்கள் பேசிக் கொண்டே போனால் உங்களுக்கும் எனக்கும் நேரவிரயமே.


    **

    இந்தப் பதிவில் இந்த சவூதி சம்பந்தமான உரையாடலை உங்களிடம் தொடர அதாவது நீங்கள் புதிதாகக் கேட்டுள்ள கேள்விக்கு பதில் சொல்லுமுன் உங்களின் நிலையை நீங்கள் தெரியப்படுத்த வேண்டும்.


    1.மதம் தான் முக்கியம் மற்றவை எல்லாம் அடுத்துதான் என்று சொல்லும் இஸ்லாமியரா நீங்கள்?
    (மதவாதிகளிடம் நான் வாத பிரதிவாதங்களை தவிர்த்து விடுவேன். வாழ்க்கை வேறு மதம் வேறு அல்லது மதம் சும்மா ஊறுகாய் போன்றது என்ற புரிதல் உள்ளவர் என்றால் மேலே பேசலாம்.)

    2. அப்படியான ஒரு இஸ்லாமியராக இருந்து "சவூதியை எப்படி புறக்கணிக்க வேண்டும்?" என்று எனது கருத்தைக் கேட்கும் பட்சத்தில், நீங்கள் இதை தெளிவு படுத்த வேண்டும்.

    3. சவூதி செய்தது குரான் மற்றும் நபி அவமதிப்பு என்று ஒத்துக் கொள்கிறீர்களா?

    (குரான் தான் எங்களின் சட்ட அடிப்படை என்று சொல்லும் ஒரு நாடு, "பெண்கள் ஓட்டுநர்களுக்கு முலைப்பால் கொடுங்கள்" என்று சொல்லி அதுதான் முகம்மதின் வழி என்று அதற்கு ஆதரமாக சில உறுதிப்படுத்தப்படாத (அல்லது சவூதி தவிர மற்ற நாடுகள் நம்பாத) ஹதீஸ்களை சொல்வது

    4. அப்படி நீங்கள் ஒத்துக் கொண்டால் , மேலும் சில கேள்விகள் உள்ளது அதைப்பிறகு பேசலாம்.

    5.நீங்கள் ஒத்துக் கொள்ளாதபட்சத்தில், சவூதியை எப்படி புறக்கணிக்க வேண்டும் நான் உங்களுக்குச் சொல்வது இருவருக்குமே நேர விரயம்.

    புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.‌


    **

    ReplyDelete
  58. //நபி பற்றிப் பேசினால் நித்யானந்தவைச் சொன்னாயா? //

    சவுதியில் இப்படி இருக்கு அப்படி இருக்குன்னு சொல்லும் போதுதான் நித்யானந்தாவை பத்தி சொன்னிகலானு கேட்டேன், எழுதிகிட்டே தூங்கிட்டின்களா? இல்ல விஷ ஊசிய ஏத்துரியா?

    //ஆனால் இப்படிக் கேட்கும் முன் ஆறு ஏழு வருடங்களாக நான் என்னதான் சொல்லிவருகிறேன் என்பதை அறிந்து கொண்டு பேச வேண்டும். //

    மன்னிச்சிக்க தல இப்பதான் படிக்கிறேன்.

    //அப்படி இல்லமால் நீங்கள் பேசிக் கொண்டே போனால் உங்களுக்கும் எனக்கும் நேரவிரயமே.//

    தேவ இல்லாம பேசி என்னோட நேர்த வேஸ்ட் பண்ணாம, சொல்ல வர செதிய நேர பேசுங்க.

    //மதம் தான் முக்கியம் மற்றவை எல்லாம் அடுத்துதான் என்று சொல்லும் இஸ்லாமியரா நீங்கள்?//

    எல்லா முஸ்லிமும் அப்படிதான். ஆனா யாரும் அறிவு இல்லாம அப்படியே கேக்க மட்டாங்க. சரியாய் இருந்தா மட்டும் தான் எடுதுகுவாங்க.

    //மதம் சும்மா ஊறுகாய் போன்றது என்ற புரிதல் உள்ளவர் என்றால் மேலே பேசலாம்//

    அப்டிலாம் கெடையாது,ஊருக மாரிலாம் எடுத்துக்க முடியாது. உனக்கு புரிய வக்க ட்ரை பண்றேன், எப்டி ஊறுகா மாதிரி எடுத்துக்க முடியும்.

    //அப்படியான ஒரு இஸ்லாமியராக இருந்து "சவூதியை எப்படி புறக்கணிக்க வேண்டும்?" என்று எனது கருத்தைக் கேட்கும் பட்சத்தில்,//

    தலைவா, நீங்க சொல்றத நான் கேக்கல, என்ன சொல்ல வரின்கன்னு தான் கேட்டேன்.

    //அப்படி நீங்கள் ஒத்துக் கொண்டால் , மேலும் சில கேள்விகள் உள்ளது அதைப்பிறகு பேசலாம். //

    சவுதி பத்தி நானே பேச விரும்பல, அது அவனோட உள்நாட்டு பிரசன, நீங்க ஏன் போட்டு பினாதிகிட்டு இருக்கீங்க.

    இனி இந்த பதிவுக்கு எந்த பதிலும் இல்ல, எனக்கு டைம் வேஸ்ட் ஆகுது. மனிசிகொங்க.

    வேறு இஸ்லாத பத்தி ஏதும் இருந்தா மட்டும் கேளுங்க என்டேருந்து பதில் வரும்.

    ReplyDelete
  59. .

    நன்றி Fa!

    மதம் இரண்டாம் பட்சம் என்று நினைப்பவர்களிடம் மட்டுமே உரையாடுவேன். இது தேவையற்ற மனச்சங்கடங்களைக் தவிர்க்கும்.
    **

    மதம்தான் உயிர்மூச்சு மற்ற எல்லாம் அப்புறம்தான் என்று என்னும் எந்த மதவாதியுடனும்(அனைத்து மதங்கள்) உரையாடல் என்னால் செய்ய இயலாது என்பதால் அப்படிப் பட்டவர்கள் எனது பதிவைத் தவிர்க்கலாம்.

    .

    ReplyDelete
  60. //மதம்தான் உயிர்மூச்சு மற்ற எல்லாம் அப்புறம்தான் என்று என்னும் எந்த மதவாதியுடனும்(அனைத்து மதங்கள்) உரையாடல் என்னால் செய்ய இயலாது என்பதால் அப்படிப் பட்டவர்கள் எனது பதிவைத் தவிர்க்கலாம். //

    சரி. ஆனா, சவுதி யா பத்தி அவன் ஒரு காளிபயல்ங்க, கயவாளிபயளுங்க அப்டி என்ன வேணுன்னாலும் எழுதலாம், ஆனா இஸ்லாம் என்னைய பனுச்சு உன்ன, அத பத்தி ஏன் தப்பு தப்பா எழுதுரன்னு தான் நான் கேக்றன். என்னைய கான்செப்ட் இஸ்லாத பத்தி பேசுனா, இஸ்லாமியன் வராம, நாத்திகனா உங்களுக்கு வெளக்கம் கொடுப்பான்.

    ReplyDelete
  61. .
    Fa,


    இஸ்லாத்தை சவூதி அவமதிப்பது அவர்களின் உள்நாட்டுப்பிரச்சனையாக‌ உங்களுக்கு இருக்கலாம். எனக்கு அப்படி இல்லை.

    உங்களுக்கு ஏதும் அதில் பிரச்சனை உள்ளதா?

    இல்லை என்றால் நீங்கள் யாராவது இஸ்லாமை விமர்சித்தால் அங்கே போய் பேசலாம். நான் இங்கு சொல்வது சவூதியின் இஸ்லாமிய அவமதிப்பு குறித்தானது மட்டுமே.

    இஸ்லாத்தின் பெயரில் ஆட்சி நடத்தும் சவூதி செய்யும் நபி/குரான் அவமதிப்பு குற்றம் என்கிறேன். இதில் நான் என்ன இஸ்லாம் பற்றி என்ன தவறாகச் சொல்லியுள்ளேன்?

    .

    ReplyDelete
  62. //"பெண்கள் கார் ஓட்டக்கூடாது" என்று இன்றுவரை பிடிவாதமாக உள்ளார்கள். கேட்டால் அதற்கு சில ஹதீஸ்களை காட்டுகிறார்கள்.//--ஆதாரம்? எந்த ஹதீஸ்? சொல்லலையே...

    //இஸ்லாமியராக அடையாளம் காட்டிக் கொள்ளும் தமிழ் பதிவர்களுக்கு......//

    //மதம் உயிரினும் மேலானது என்று சொல்பவர்களுக்கு மட்டுமே எனது கேள்வி.//

    என்றெல்லாம் சொன்ன கல்வெட்டு...

    //மதவாதிகளிடம் நான் வாத பிரதிவாதங்களை தவிர்த்து விடுவேன். வாழ்க்கை வேறு மதம் வேறு அல்லது மதம் சும்மா ஊறுகாய் போன்றது என்ற புரிதல் உள்ளவர் என்றால் மேலே பேசலாம்.//

    என்றும் சொல்கிறார்...

    நீங்கள் இதை தெளிவு படுத்த வேண்டும் மிஸ்டர் கல்வெட்டு.

    //புறக்கணிக்கிறதுன்னு சொன்ன எந்த வகையிலன்னு தெரிஞ்சிக்கலாமா?//--இதுக்கு உங்களிடம் பதில் இல்லையா?
    பதில் தெரியலையா?
    பதில் சொல்ல முடியாதா?

    //நீங்கள் முதலில் பேசுபொருள் பற்றிப் பேச வேண்டும்.//--இந்த 'பேசுபோருளை' முதலில் சொன்னவரே நீங்கள்தானேய்யா? நாங்களா சொன்னோம்...? எந்த வையில் புறக்கணிப்பது என்று புறக்கணிக்க சொன்னவரிடம் கேட்காமல் எவரிடம் கேட்பது?

    எல்லாத்தையும் கண்டமேனிக்கு சிந்திக்காம கிறுக்கிட்டு அப்புறம் எப்படி பொறுப்பற்ற முறையில் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவலாம்? கேவலமாய் இல்லை திரு.கல்வெட்டு உங்களுக்கு?

    //ஆனால் இப்படிக் கேட்கும் முன் ஆறு ஏழு வருடங்களாக நான் என்னதான் சொல்லிவருகிறேன் என்பதை அறிந்து கொண்டு பேச வேண்டும்.//--போதுமய்யா... போதும்... ஒரே ஒரு பதிவை படிச்சே மெண்டல் ஆக வேண்டிய விளிம்பு நிலைக்கு வந்தாச்சுய்யா... இதுலே ஆறு ஏழு வருஷ பதிவுகளா.....!?!?!?!?

    உயிரும் உடலும் போன்றது இஸ்லாமும் முஸ்லிமும்...

    //மதம் இரண்டாம் பட்சம் என்று நினைப்பவர்களிடம் மட்டுமே உரையாடுவேன்.//--பினத்தோடுதான் உரையாடுவீர்கள் போலிருக்கு... எதற்கு இந்த திடீர் சறுக்கல்...?

    //மதம்தான் உயிர்மூச்சு மற்ற எல்லாம் அப்புறம்தான் என்று என்னும் எந்த மதவாதியுடனும்(அனைத்து மதங்கள்) உரையாடல் என்னால் செய்ய இயலாது என்பதால் அப்படிப் பட்டவர்கள் எனது பதிவைத் தவிர்க்கலாம்.//-- கெட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் //நன்றி// //நன்றி//-ன்னு இளிச்சுட்டு பின்னங்கால் பிடறியல் உதைக்க டவுசர் கழண்டு புறமுதுகிட்டு நீங்கள் ஓடுவது பாக்க சகிக்கலை.. Mr.கல்வெட்டு....

    ReplyDelete
  63. //இஸ்லாமியராக அடையாளம் காட்டிக் கொள்ளும் தமிழ் பதிவர்களுக்கு......//

    //மதம் உயிரினும் மேலானது என்று சொல்பவர்களுக்கு மட்டுமே எனது கேள்வி.//

    என்றெல்லாம் சொன்ன கல்வெட்டு...

    //மதவாதிகளிடம் நான் வாத பிரதிவாதங்களை தவிர்த்து விடுவேன். வாழ்க்கை வேறு மதம் வேறு அல்லது மதம் சும்மா ஊறுகாய் போன்றது என்ற புரிதல் உள்ளவர் என்றால் மேலே பேசலாம்.//

    என்றும் சொல்கிறார்...

    நீங்கள் இதை தெளிவு படுத்த வேண்டும் மிஸ்டர் கல்வெட்டு.

    //புறக்கணிக்கிறதுன்னு சொன்ன எந்த வகையிலன்னு தெரிஞ்சிக்கலாமா?//--இதுக்கு உங்களிடம் பதில் இல்லையா?
    பதில் தெரியலையா?
    பதில் சொல்ல முடியாதா?

    //நீங்கள் முதலில் பேசுபொருள் பற்றிப் பேச வேண்டும்.//--இந்த 'பேசுபோருளை' முதலில் சொன்னவரே நீங்கள்தானேய்யா? நாங்களா சொன்னோம்...? எந்த வையில் புறக்கணிப்பது என்று புறக்கணிக்க சொன்னவரிடம் கேட்காமல் எவரிடம் கேட்பது? பதில் சொல்ல முஸ்லிம் வராமல் முண்டமா(நாத்திகனா) வருவான்?

    எல்லாத்தையும் கண்டமேனிக்கு சிந்திக்காம கிறுக்கிட்டு அப்புறம் எப்படி பொறுப்பற்ற முறையில் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவலாம்? கேவலமாய் இல்லை திரு.கல்வெட்டு உங்களுக்கு?

    //ஆனால் இப்படிக் கேட்கும் முன் ஆறு ஏழு வருடங்களாக நான் என்னதான் சொல்லிவருகிறேன் என்பதை அறிந்து கொண்டு பேச வேண்டும்.//--போதுமய்யா... போதும்... ஒரே ஒரு பதிவை படிச்சே மெண்டல் ஆக வேண்டிய விளிம்பு நிலைக்கு வந்தாச்சுய்யா... இதுலே ஆறு ஏழு வருஷ பதிவுகளா.....!?!?!?!?

    உயிரும் உடலும் போன்றது இஸ்லாமும் முஸ்லிமும்...

    //மதம் இரண்டாம் பட்சம் என்று நினைப்பவர்களிடம் மட்டுமே உரையாடுவேன்.//--பினத்தோடுதான் உரையாடுவீர்கள் போலிருக்கு... எதற்கு இந்த திடீர் சறுக்கல்...?

    //மதம்தான் உயிர்மூச்சு மற்ற எல்லாம் அப்புறம்தான் என்று என்னும் எந்த மதவாதியுடனும்(அனைத்து மதங்கள்) உரையாடல் என்னால் செய்ய இயலாது என்பதால் அப்படிப் பட்டவர்கள் எனது பதிவைத் தவிர்க்கலாம்.//-- கெட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் //நன்றி// //நன்றி//-ன்னு இளிச்சுட்டு பின்னங்கால் பிடறியல் உதைக்க டவுசர் கழண்டு புறமுதுகிட்டு நீங்கள் ஓடுவது பாக்க சகிக்கலை.. கல்வெட்டு....

    //என்று "Shaikh Abdul Mohsin Bin Nasser Al Obaikan" ( member of Saudi Council of Senior Scholars and adviser to the king) சொல்லியிருக்கிறார்.//--என்று தெளிவாக பதிவில் எழுதிவிட்டு... அதற்கு முரணாக... இப்போது...//நான் இங்கு சொல்வது சவூதியின் இஸ்லாமிய அவமதிப்பு குறித்தானது மட்டுமே.// --என்று என்னமோ அரசகட்டளை வந்துட்டா மாதிரி பிளேட்டை கவிழ்த்தால் என்னங்கண்ணா அர்த்தம்? அரசர ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டு சட்டமாகிவிட்டதா என்ன?

    ஆடு நழையுதேன்னு ஓநாய் ஏன் ஒப்பாரி வெக்கிது?

    பதில் சொல்ல திராணி இல்லாட்டி இனிமேல் இஸ்லாம் பத்தி கண்டபடி கிறுக்க வேண்டாம்...

    போங்கய்யா போக்கத்தவங்களா...

    ReplyDelete
  64. .

    மதங்களையோ அல்லது மதங்கள் சொல்லும் எந்த கதைகளையும் நம்புவது இல்லை. இருந்தாலும் பொது நூலகம் போனாலும் குவிந்து கிடக்கும் இத்தகைய புத்தகங்களை, வரலாற்றை எப்படிச் சொல்லி இருக்கிறார்கள் என்று அறியும் நோக்கிலும், இந்த கதைகளின் பின்னனயில் இருந்து அந்தக் கால வாழ்க்கைமுறைகளை அறிந்து கொள்ளும் ஆர்வத்தாலும் மட்டுமே மதப் புத்தகங்களை படிக்கும் நோக்கம்.

    ***

    ஒரு பெண் தனக்கு இரத்த உறவு இல்லாத ஒரு வயதுக்கு வந்த ஆடவனுடன் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சில ஹதீஸ்கள் சொல்கிறது. சவூதி அறிஞர்கள் பெண்கள் ட்ரைவருடன் காரில் செல்ல கட்டுப்பாடு விதிக்கும் வழிகள் இந்த ஹதீஸ்களில் சொல்லப்படும் விசயங்களாகவே உள்ளது. :-(((

    சிலர் வழக்கம் போல இது உண்மையான ஹதீஸ் அல்ல எனலாம்.

    சிலர் இது சரியான மொழிபெயர்ப்பு இல்லை எனலாம்.

    எது எப்படியோ இப்படியும் சிலவகைகள் உள்ளது என்பது மறுக்க முடியாதது.



    1. இந்த தளம் http://iknowledge.islamicnature.com தனது அரபி -> ஆங்கில மொழிபெயர்ப்பை சரிபார்த்தலுக்கு ஆதரமாக இன்னொரு தளத்தை "http://Tanzil.info" சுட்டுகிறது. பார்க்க‌ http://iknowledge.islamicnature.com/credits.php

    2. இந்த http://tanzil.info/ தளமானது Hamid Zarrabi-Zadeh என்பவரால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது

    3. Hamid Zarrabi-Zadeh இவரைப் பற்றி அறிய இந்த தளத்தில் http://tanzil.info/ இடது பக்க மேல் பகுதியில் "about" என்ற பொத்தானை அமுக்கினால் வரும் பகுதியில் இருந்து அறிந்து கொள்ளலாம்

    4. "Hamid Zarrabi" பற்றியும் இந்த Tanzil புராஜெக்ட் பற்றியும் மேலும் அறிய நேரடிச் சுட்டிகள்
    http://cg.scs.carleton.ca/~zarrabi/
    http://tanzil.info/wiki/Tanzil_Project



    ‍‍==========================
    Sahih Muslim - 08) Marriage

    http://iknowledge.islamicnature.com/hadith/scholar/muslim/book/008/

    Hadith 3424

    Hadith 3425

    Hadith 3426

    .

    ReplyDelete