Sunday, November 14, 2021

சனாதனம்,பிராமணன்,பார்ப்பனியம், அந்தணர்,வர்ணம், சாதி: சொல்-பொருள் விளக்கம்

சனாதனம்:

சமசுகெரகச் சொல். அதன் பொருள் "என்றும் மாறாதது". அதாவது அதில் சொல்லப்பட்டவைகள் எக்காலத்திலும் யாராலும் மாற்றமுடியாதது. (இந்த விளக்கமே அறிவியலுக்கு முரணானது). மாற்றவே முடியாதது என்று சொல்வதன் நோக்கம், "இது உனக்கு விதிக்கப்பட்டது. அவ்ளோதான். நாங்க எழுதிவைத்ததைக் கேள்." என்ற அரசியலே.

(சனாதன்) வேதம்:

அப்படி மாற்றவே முடியாத(சனாதன்) ஒன்று எது? அதை எழுதினார்கள்?என்றால் அதுதான் வேதங்கள் எனப்படுபவை. இந்த வேதங்களை யார் எழுதினார்கள்? ஆரிய பிராமின்கள். ஏன் எழுதினார்கள்? கதைகளின் மூலம் வரலாற்றைக் திரிக்க & தங்களின் கருத்தை சமூக சட்டமாக்க.

கர்மா:

சமசுகெரக பொருள் விதிக்கப்பட்டது.

தர்மா/தர்மம்:

சனாதன தர்மத்தின் சுருக்கம்.

(தமிழில் அறம் மட்டுமே உள்ளது. அது பிறப்பால் வருவதும் இல்லை. பரிகாரம் செய்தால் போவதும் இல்லை. அது சமூக நன்னடத்தை அவ்வளவே)

எமதர்மன்: சனாதன தர்மத்தை execute செய்பவன்.

தர்மன்: எம தர்மனுக்கும் குந்திக்கும் பிறந்த யுதிச்தரனின் (Yudhishthira) டுவீட்டர் Handle.

வர்ணம்:

Literal meaning = Color

சனாதன வேதத்தில், மனிதர்களை பிறப்பால் தீண்டாமை பார்க்கும் ஒரு கோட்பாடு.  Birth based discrimination in the name of Varnam. (Similar to Racism, Fascism & Nazism)


சாதி:

Jati is a Sanskrit word meaning "birth.

சாதி என்பது தமிழ்ச்சொல்லே அல்ல. Jaன் Jaனனம் என்ற சமசுகெரம். Jaன் என்றாலே பிறப்புவழி.

பிராமணன்:

சனாதன வேத‌ நால் வருணத்தில் முதல் வருணமாகச் சொல்லப்படுவது.

Brahmin, Kshatriya, Vaishya & Shudra

பிராமணன் என்பது சாதி அல்ல அது வர்ணம். அய்யரன், அய்யங்காரன், சர்மான், பண்டிட்,நம்பூதிரியன்,தீட்சிதன் போன்றவைகளே சாதி. ஆனால், இவையாவும் ஒரே பிராமிண் வர்ணத்தில் வருபவை.

பிறப்பு வழியில் அய்யரன் அய்யங்க்காரனாக பிறந்த இந்த சாதி ஆண்கள், "யக்ஞோபவிதம்" என்ற  சடங்கு செய்து, பூணூல் போட்டு, அக்னி(தீ) வளர்த்து வழிபட்டு , மனிதனின் இயல்பான பெண் யோனி வழிப்பிறப்பை பாவயோனி என்று சொல்லி, இரண்டாம பிறப்பாக (கிறித்துவ பாப்டிசம் போல?)செய்து கொள்ளும் சடங்கே பூணூல் சடங்கு. இந்த அய்யரன் அய்ய‌ங்காரன் சாதியில் பிறந்தவகர்ளே என்றாலும் அந்தசாதிப் பெண்களுக்கு பூணூல் சடங்கு அதாவது இரண்டாம் பிறப்பு சடங்கு இல்லை. 

இந்த சாதிப் பெண்கள் வர்ணத்தில் சூத்திரவர்ணமே. பிறப்பையும் பெண்ணையும் அசிங்கப்படுத்தும் "பாவயோனி" என்ற சொல் இவர்களிடம் உண்டு.
 
தமிழ்நாட்டில் சாதிச் சங்கம் உள்ளது. அது சாபக்கேடுதான்.
ஆனால் "வர்ணத்திற்கு" என சங்கம் வைத்துள்ள ஒரு வர்ணம் "பிராமிண்" வர்ணம்தான்.
Caution:
இவர்கள் தங்களை பிராமணன் என்று ஒவ்வொரு முறை சொல்லும் போதும், பிறரை மறைமுகமாக சூத்திரன் என்றே வசைபாடுகிறார்கள்.

When "they" say they are Brahmin, we must ask following questions to expose them.

  • How do you become Brahmin?
  • What makes you Brahmin?
  • Is that birth based discrimination?
  • If you are Brahmin what about millions of people in India, why they are not Brahmins?

பார்ப்பான்/பார்ப்பனிசம்:

சனாதன வேதத்தை practice செய்பவன் பார்ப்பான். பிறப்பு வழி தீண்டாமை பார்க்கும் அவனது செயல் பார்ப்பனிசம். Similar to Racism, Fascism & Nazism) 

Parpanism is ideology which discriminate people by birth.

மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

கவனியுங்கள் இங்கே பிறப்பின் வழி என்கிறார் வள்ளுவர். 

அந்தணர்:
அந்தணர் வேறு பார்ப்பான் வேறு!
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

அவ்ளோதன். அறத்தின் வழி நடக்கும் மனிதன் அந்தணன். கவனியுங்கள் இதில் பிறப்போ, வர்ணமோ, சாதியோ இல்லை. ஓரு பட்டம் போன்றது. அவ்வளவே.

No comments:

Post a Comment