Wednesday, May 31, 2006

நன்றி கலைஞரே நன்றி !!!

அனைத்து பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக தமிழ்:

அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய முதல் பாடமாக ஆக்கப்பட்டுள்ளது. 2வது பாடமாக ஆங்கிலமும், 3வது பாடமாக கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களும், 4வது பாடமாக பிற மொழிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை தமிழ் தமிழ் நாட்டில் கட்டாயப் பாடமாக்கப்படுகிறது.

இது Internatinal School/ CBSE/ICSE/ களுக்கும் சேர்த்தா?
L.K.G/U.K.G போன்ற சிறார் பள்ளி முதல் நடைமுறைப் படுத்தினால் நல்லது.


நிகர்நிலைப் பல்கலைக்கழகம்/தனியார் கல்லூரிகளில் 69 சதவீத இட ஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோர் : 30 %
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் : 20 %
பட்டியல் இனத்தோர் : 18 %
பழங்குடியினர் : 1 %

இதில் சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்கள் இடம் பெறாதது வருத்தமே. சிறுபான்மையினர் என்றாலும் அவர்கள் மதங்களிலும் (இனங்களிலும்) பிற்படுத்தப்பட்டோர்கள் உண்டு. அவர்களுக்கும் ஏதேனும் வழிமுறைகள் ஆராயப்பட வேண்டும்.

நன்றி கலைஞரே நன்றி !!!

****************


****************

2 comments:

  1. Just wanted to tell that the other post was pretty much needed. enabling/disabling is your chioce thougth. Please dont publish this comment if found inappropriate. Sorry for being in English

    ReplyDelete
  2. அன்புள்ள அய்யா,

    தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாம வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

    நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

    இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

    தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

    தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

    கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

    எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

    சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

    தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

    இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

    கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

    தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?


    Post a Comment

    ReplyDelete