Friday, November 13, 2009

இணைய வளர்ச்சியில் ஆன்மீக,ஜோசிய, தகடு வியபாரிகள்.

ணைய வளர்ச்சியில் ஆன்மீக ஜல்லிகள் அடிப்பது தாண்டி அறிவியலை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துகிறார்கள். ஆன்மீக,ஜோசிய,தகடு வியபாரிகள்.

பேர் அண்டு லவ்லி, மைக்கேல் ஜாக்சன், ஜோதிடம் மற்றும் சில மனிதர்கள்
http://kalvetu.blogspot.com/2007/11/blog-post_20.html

ஆட்டைக் கடித்து மாட்டைக்கடித்து மனிதனைக் கடித்த கதையாக ஓம்கார் இப்போது விவசாய ஜல்லியை ஆரம்பித்து இருக்கிறார். ஓம்காரின் விவசாய ஜல்லி (http://vediceye.blogspot.com/2009/11/11.html) .

-----இரும்பு பயன்பாடு மனிதனுக்கு தெரிந்து இருந்தும் விவசாயத்தில் நேரடியாக நிலத்திற்கும், விதைகளுக்கும் தொடர்பு கொள்ளும் பொருட்களை அவன் இரும்பால் உருவாக்கவில்லை ---- என்று அவர் மூடர்களைப் பார்த்துச் சொல்கிறார். உழுவதற்கு ஏர் இரும்பின் பயன்பாடு இல்லாமல் (இரும்பு மண்ணைத் தொடக்கூடாதாம்) மரத்தில் இருந்தது என்று சொல்கிறார்.. இவர் எந்தக் காலத்திய ஏரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. ஏர் முனையில் நீளமான கூரிய இரும்பு பட்டை இருக்கும் . அது மரத்தோடு இணைக்கப்பட்டு மண்ணைக்கீற உதவும். கத்தியை சாணை பிடிப்பதுபோல இதையும் அவ்வப்போது பட்டை தீட்ட வேண்டும்.

ஓம்கார் ஏர் பார்த்துள்ளாரா என்று சந்தேகம். எந்தக்கால / எந்த நாட்டு ஏரைப்பற்றிப்பேசுகிறார்? புண்ணாக்கு வேதகாலம் எந்த நூற்றாண்டில் இருந்து எந்த நூற்றாண்டுவரை இருந்தத்து அல்லது இருந்ததாக இவர் நம்புகிறார் என்று சொன்னால் இவரை இன்னும் வெளிச்சம்போட்டுக்காட்டலாம். கும்ஸாக வேதகாலம் என்று கப்ஸாகாலத்து கதையில் ஏர் மரத்தில் மட்டும் செய்யப்பட்டது என்று சொல்கிறார். அவருக்கு ஜால்ரா போடுபவர்களில் எத்தனைபேர் விவசாய பிண்ணனி கொண்டவர்கள் என்று தெரியவில்லை.

பரம்படிக்கும் கட்டையிலும் இரும்பு இருக்கும். பாத்தி கட்ட , வரப்பு வெட்ட மற்றும் விவசாயிகளின் முக்கியமான டூல் மண்வெட்டி. அது என்ன ருத்திராட்ச கொட்டையில் செய்ததா? கதிர் அருக்கும் அரிவாள் நெய்யில் செய்ததா? இப்படி பல கருவிகள் விவசாய்த்தில் நேரடி மண் / பயிர் தொடர்பு கொண்டவை.

தகடு விற்கும் சாமியார்கள் , அல்லது காமகேடிகள்கூட பரவாயில்லை. இப்படி விவசாயத்தையும் அறிவியலையும் மனிதனின் வாழ்வு சம்பந்தப்பட்ட உண்மைகளையும்... கேட்க ஒரு கூட்டம் உள்ளது என்பதற்காக திரிக்கக்கூடாது ஓம்கார்.

விதைகலயங்கள் மண் மற்றும் மூங்கில் கூடைகள் "எல்லாம்" மொழுகப்படுவது இல்லை. கேப்பை, கம்பு போன்ற சிறியவகைத் தானியங்கள் பின்னப்பட்ட கூடை இடுக்கில் வழியாக கசிந்து, சிந்தாமல் இருக்க சாணி கொண்டு மொழுகப்பட்டது. பின்னர் அது எல்லா மூங்கில் கூடைகளுக்கும் சகட்டு மேனிக்கு "ஸ்டாராங்கா இருக்கும் " என்று எக்ஸ்ட்ரா கோட்டிங்காக பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
எனது அம்மா , பஞ்சாரத்திற்கும் சாணி மொழுகுவார். கோழி அடைக்கப்பயன்படும் பஞ்சாரம் காற்றோட்டமாய் இருக்க வேண்டியது அவசியம். "இருக்குற ஓட்ட (சன்னல்கள்) போதுண்டா, சாணி போட்டா ரொம்ப நாளைக்கு வரும்" என்று மாதம் ஒருமுறை மொழுகுவார்.

விதை நெல் விதைப்பதற்கு பெரும்பாலான விவசாயிகள் இரும்பாலானா , பித்தளையில் சட்டம் போட்டு அழகுபடுத்தப்பட்ட மரக்காயை விரும்பி பயன்படுத்துவார்கள். மரக்காய் பார்த்தது உண்டா ஓம்கார் ?

---- " நம் உடலில் மின்சக்தி உண்டு என்பது தெரியும். விதை மற்றும் மண்ணில் உள்ள மின்சக்தியும் அயனியாக்கமும் நம் கைகளில் அவற்றை தொடுவதன் மூலம் பாதிப்படையும். விளைச்சல் குறையும். உலோகங்கள் கடத்தி என்பதால் விவசாயத்திற்கு அதிகமாக கடத்திகளை பயன்படுத்துவதில்லை." -----

இப்படி ஒரு ஜல்லி அடிக்கிறார் ஓம்கார்.
இரும்பாலான கருவிகளை விடுங்கள்.விளைநிலத்தில் உள்ள இருக்க வேண்டிய கட்டாய தாது வகைகள் தெரியுமா? தண்ணீர் இருந்தால்கூட எல்லா தாவரங்களும் (மரம் ,செடி,கொடி ,கீரை..) எல்லா நிலத்திலும் வளராது/விளையாது. ஏன் என்றால் மண்ணில் அவற்றுக்கான தாதுக்கள் இருக்க வேண்டியது அவசியம்.

இவர் எந்த பயிரைப்பற்றி ஜல்லி அடிக்கிறார் என்று தெரியாது. பொதுவாக நெல், கரும்பு வாழை என்று சொன்னால்கூட அதற்கு மண்ணில் இருக்கவேண்டிய குறைந்த பட்ச இரும்புச் சத்து என்ன என்று மண்ணாய்வு செய்து சொல்லப்படவேண்டிய விசயம்.

ஓம்கார்,
அறிவியல் ஜல்லி , விவசாய அடிப்படை தெரியாமல் "ஜல்லி" என்று கலந்து கட்டி மசாலாவுடன் ஆன்மீகம் விற்கிறீர்கள். மனசாட்சி இல்லாமல் அறிவியலை இப்படிக் கேவலப்படுத்தாதீர்கள்.

----------------------------

நீங்கள் அண்ணாமலைக்கு காசில்லாமல் நடந்தது சப்பை மேட்டர். பலர் பல காரணக்களுக்காக பலவிதமாக காசில்லாமல் அண்ணாமலை இல்லாமல் ஊர்சுற்றுகிறார்கள். இந்தியா முழுவதும் கையில் காசில்லாமல் நடந்து சென்றவர் உண்டு .

நான்கு வருடங்கள் நடந்தே இந்தியா முழுவதும் சுற்றி வந்திருக்கிறார். அதுவும் 2002ல் இருந்து 2006 வரை யான இந்த காலகட்டத்தில்.

நடந்து தீராத கால்கள்.
http://www.sramakrishnan.com/deep_story.asp?id=218&page=3

இந்தியாவில் இருந்து அமெரிக்காவரை நடந்த மனிதர்கள் உள்ளார்கள்.
நடையால் வென்ற உலகம்
http://www.sramakrishnan.com/deep_story.asp?id=88&page=5

//டெல்லியில் உள்ள காந்தி சமாதியில் இருந்து தங்களது நடைபயணத்தைத் துவக்கினார்கள். ....பிச்சை எடுத்து வாழ்வது போல ஆங்காங்கே கிடைத்தை சாப்பிட்டு வழியில் தூங்கி நடந்து சென்றனர். பயணத்திற்கு எதிரி சுமை என்பதால் இரண்டே மாற்று உடைகளுடன் அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.//


**

ஓம்கார் VS சித்தூர்.முருகேசன் !
http://govikannan.blogspot.com/2009/11/vs.html

Image Courtesy
http://media.photobucket.com

No comments:

Post a Comment