Tuesday, November 17, 2009

பாலஸ்தீனம்-இலங்கை-திபெத் -- சீனா - இந்தியா- இஸ்ரேல்-அமெரிக்கா--- ஒபாமா

மைதிக்கான நோபல் பரிசு என்பது சினிமா நடிகர் விஜய் வாங்கிய டாக்டர் பட்டம் போன்றது. எந்த விருதுகளும் அது யாருக்கு அளிக்கப்படுகிறது என்பதில்தான் தனக்கான பெருமையை, தனிச்சிறப்பை வெளிக்காட்டுகிறது. பத்மசிரி என்ற விருது சினிமா நடிகர் விவேக்கிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே சத்யஜித்ரேக்கும்(1958) ஒருகாலத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. நாகேஷ் என்ற ஒரு நடிகர், நம்பியார் என்ற ஒரு நடிகர், இவர்கள் எல்லாம் அவர்கள் பாட்டுக்கு நடித்துவிட்டுப் போனவர்கள்.

விவேக் காமெடி நடிகரா அல்லது விருதே காமெடியா?

அறிவியல் வரிசையில் கொடுக்கப்படும் நோபல் பரிசிற்கான தகுதிகள் தீர்க்கமாக இருப்பதாலும் , அதை நிரூபிக்க முடிவதாலும் இன்னும் அதன்மீது நம்பகத்தன்மை இருக்கிறது எனக்கு. அமைதிக்கான நோபல் என்பது இந்த நூற்றாண்டின் அதிகபட்சக்காமெடி.

**
பாமா
ஒபாமாவிடம் இதுவரை பிடித்தது அவரின் பேச்சு. திராவிட இயக்கத்தலைவர்கள்போல தீர்க்கமான பேச்சு. இவரின் செயல்பாடுகள் ஒவ்வொன்றாய் வெளியில் வரத்தொடங்கியுள்ளது. இதுவரை மருத்துவக்காப்பீடு, பொருளாதாரம் என்று அமெரிக்கப் பிரச்சனைகளை எதிர்கொண்டு அதற்கான உரைகளை கனகச்சிதமாக வழங்கிவந்துள்ள ஒபாமா , உலகளாவிய விசயங்களில் இப்போது நாட்டாமையை ஆரம்பித்துள்ளார். தலாய்லாமா அமெரிக்கா வந்தபோது அவரை சந்திக்க ஒபாமா விரும்பவில்லை. தலாய்லாமா சும்மா திரும்பிப்போனார்.

ஜெயலலிதாவிற்குப்பயந்து , கருணாநிதி குடும்பவிழாவில் கலந்துகொள்ளத் தயங்கும் அதிமுக பிராண்ட் முன்னாள் அமைச்சர்கள் போல , சீனாவிற்காக தலாய்லாமாவைத் தவிர்த்துவிட்டார் ஒபாமா என்று நினைக்கத் தோன்றியது. அது இன்று உண்மையாகியுள்ளது.

"We did note that while we recognize that Tibet is part of the People's Republic of China,” - Mr. Obama
http://whitehouse.blogs.foxnews.com/2009/11/17/5619/

***

யாசர் அராபத் ‍- தலாய்லாமா
தலாய்லாமா போல‌ ஒருகாலத்தில் யாசர் அராபத் இப்படித்தான் எல்லா நாட்டிற்கும் பறந்து பறந்து போனார். பல முறை அவர் அந்தநாளைய அமெரிக்க ஜனாதிபதிகளைப்பார்த்து பேசியுள்ளார். இருந்தாலும் சாகும்வரை அவரால் அவர் நினைத்ததை அடையமுடியவில்லை. தலாய்லாமா என்ன நினைக்கிறார் என்று தெரியாது. ஆனால் இவருக்கு அடுத்து "திபெத்தின் தனித்தன்மை" என்ற ஒன்று கேள்விக்குறியே. இனிமேல் ஒபாமா தலாய்லாமாவைச் சந்தித்தாலும் ஒபாமாவின் பேச்சு எந்தத்திசையில் இருக்கும் என்பது தெரிந்ததே.திபெத்தை சீனாவின் பகுதியாக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அறிவித்தபின் , "தனித்துவம் கொண்ட திபெத் நாடு" என்று தலாய்லாமா பேச்சை ஆரம்பிக்க முடியாது.

***

ந்தியா ‍ - தர்மசாலா - திபெத்


"திபெத்திற்கு வெளியே திபெத் அரசாங்கம்" என்று இந்தியாவின் ஆதரவில் இருக்கும் தலாய்லாமாவின் குறைந்தபட்ச மரியாதை இனிமேல் என்ன ஆகுமோ? அமெரிக்காவின் ஆசிர்வதிக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி , ஆசிர்வதிக்கப்பட்ட அரசுகளைத் தாண்டி போட்டி அரசாங்கம் எத்தனைகாலம் தலாய்லாமா நடத்துவார்? அமெரிக்காவின் ஆசியுடன் திபெத் ஒருங்கிணைந்த சீனாவின் பகுதியாக கலந்துவிட்டபிறகு, தனி ஆவர்த்தணம் செய்யும் தலாய்லாமா தீவிரவாதி போன்றவரே.

"அருணாச்சலப் பிரதேசம் இன்னும் பிரச்சனைக்குள்ளான ஒரு பகுதி" என்று இந்தியாவின் பிரதமர் அங்கே சென்றால்கூட யாராவது ஒரு சீனக்குடிமகனை வைத்து சத்தம்போட வைக்கும் சீனா, இனி அமெரிக்கா உதவியுடன் "இந்தியா -தலாய்லாமா - தர்மசாலா" அமைப்பை ஆட்டிப் பார்க்கும்.

இந்திய அர‌சாங்கம், கிரிகெட் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் உதவியுடன் எத்தனை காலத்திற்கு பாகிஸ்தானை எதிர்த்து தேசியம் வளர்க்க முடியும்?

**
சீ
னா - இலங்கை - இந்தியா
யாசர் அராபத் ஒரு காலத்தில் போராளியாக‌ இருந்து பின்னர் அரசியல் பேச்சு வார்த்தை என்று திரும்பியவர். இவரால் இவர் காலம் உள்ளவரை நினைத்ததை அடையமுடியவில்லை. அவர் காலத்திற்கு பின்னாலும் அதே நிலை.



















லாய்லாமா அமைதிவழியில் மட்டும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருப்பவர். சீனா அமெரிக்க கூட்டணியைத்தாண்டி நிச்சயம் இவரால் இவர் நினைத்ததை அடையமுடியாது.



















பி
ராபாகரன்போராளியாக மட்டும் இருந்து, எந்தவித அரசியல் முயற்சிகளிலும் (தலாய்லாமா,யாசர்அராபத் போல) ஈடுபடாமல் , போர் ஒன்றையே நம்பி இறந்துவிட்டவ‌ர். பிரபாகரனாலும் தான் நினைத்ததை தனது காலத்தில் அடைய முடியவில்லை.





















(Civilians stand behind the barbed-wire perimeter fence of the Manik Farm refugee camp located on the outskirts of northern Sri Lankan town of Vavuniya)

ஆயுதமாகட்டும் (பிராபாகரன்), பேச்சுவார்த்தையாகட்டும் (லாய்லாமா), ஆயுதம் + பேச்சுவார்த்தையாகட்டும் (யாசர் அராபத்) வலிமையான நாடுகளின் ஆதரவு இல்லாமல் இனிமேல் யாருக்கும் எந்த சுதந்திரமும் கிடைக்கப்போவது இல்லை. ஈரான் அல்லது வட கொரியாபோல அணு ஆயுதம் (எதிரியும் பயப்படும்/யோசிக்கும்) இருந்தால் மட்டுமே வலிமையானவர்களுடன் பேச்சுவார்த்தையாவது நடத்தமுடியும் என்ற அளவிற்கு உலகம் சென்றுவிட்டது.




















(A group of black children and men standing behind a barbed-wire fence, the boundary of their township, just southwest of the city of Johannesburg, S.Af., 1950.)

ந்தியாவின் சர்வதேச / அயலுறவுக் கொள்கை
இந்தியாவின் சர்வதேச / அயலுறவுக் கொள்கைகள் என்பது உச்சகட்ட‌ காமெடிக் கதம்பம் போல உள்ளது. திடமான நேர்மையான தலைவர்கள் இனி வரப்போவது இல்லை. காசுக்கு ஓட்டுப்போடும் மக்கள் இருக்கும்வரை அதிக காசு உள்ளவர்தான் நாளைய இந்தியாவின் தலைவர்.



.

8 comments:

  1. நோபெல் பரிசு வழங்குவதில் சில சர்ச்சைகள் இருந்தாலும், இன்னமும் அதற்கு சர்வதேச அங்கீகாரமும், மரியாதையும் இருக்கத் தான் செய்கிறது!

    இது ஒன்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் கலைமாமணி விருது போல அல்ல.

    அப்புறம் திபெத்!

    ஐந்தாவது தலாய் லாமா காலத்திலேயே திபெத் சீனாவின் ஒன்றிணைக்கப்பட்ட பகுதி தான் என்பது சாசனப்படுத்தப் பட்டு விட்டது. இப்போதிருப்பவர் பதினாலாவது. கொஞ்சம் இணையத்தில் தேடினாலே, அதிக விவரங்கள் கிடைக்கும். அதைக் கூட செய்யாமல்,சம்பந்தமே இல்லாமல் வேறு ஒன்றுடன் முடிச்சுப்போட்டு எழுத வேண்டாமே!

    ReplyDelete
  2. கிருஷ்ணமூர்த்தி said...
    //நோபெல் பரிசு வழங்குவதில் சில சர்ச்சைகள் இருந்தாலும், இன்னமும் அதற்கு சர்வதேச அங்கீகாரமும், மரியாதையும் இருக்கத் தான் செய்கிறது!//

    இது ஒன்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் கலைமாமணி விருது போல அல்ல//


    உங்களுக்கு எப்படி கலைமாமணியோ அதுபோல எனக்கு நோபலின் அமைதிக்கான விருது. ஒவ்வொருவருக்கும் ஒன்று.

    ***

    திபெத்

    //ஐந்தாவது தலாய் லாமா காலத்திலேயே திபெத் சீனாவின் ஒன்றிணைக்கப்பட்ட பகுதி தான் என்பது சாசனப்படுத்தப் பட்டு விட்டது. இப்போதிருப்பவர் பதினாலாவது. கொஞ்சம் இணையத்தில் தேடினாலே, அதிக விவரங்கள் கிடைக்கும். அதைக் கூட செய்யாமல்,சம்பந்தமே இல்லாமல் வேறு ஒன்றுடன் முடிச்சுப்போட்டு எழுத வேண்டாமே!//

    காஷ்மீர்கூட அரசரின் அனுமதியுடன்தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

    யார் எந்த சாசனம் போட்டு எதைச் சேர்த்தாலும் தனிமனிதனாக எனது கருத்துக்களே இவை.

    இவை நீங்கள் நம்பும் அல்லது உலகம் நம்பும் உண்மைகளில் இருந்து மாறுபட்டு இருக்கலாம்.

    ***

    இணைய‌த்தில் மட்டும் தேடி எழுத நான் எதற்குத்தனியாக பதிவு எழுதவேண்டும்? அதுதான் ஏற்கனவே இருக்கிறதே?

    இவை திபெத் என்ற நாடு குறித்தான எனது விமர்சன‌ங்களே அன்றி மற்றவடர் போட்ட சாசனங்களின் அடிப்படையில் திணிக்கப்படும் சிந்தனைகள் அல்ல.

    ReplyDelete
  3. கிருஷ்ணமூர்த்தி,
    எல் கேஜி முதல் ஆஸ்கார் தொட்டு நோபல் வரை விருத்துக்கான லாபியிங் உள்ளது . ஒரு விருதின் மறைமுக அரசியல்தனங்கள் சமூகத்தை பாதிக்கும்போது அல்லது கேலிக்குள்ளாக்கும்போது அதுசார்ந்த விமர்சனங்கள் வந்துவிடுகிறது.

    ஒவ்வொருவருக்கும் ஒரு சார்பு அரசியல். எனக்கும் சமூக அரசியல் சார்பு உள்ளது. எனது பார்வையில் விரியும் கருத்துகளைச் சொல்லும் அதே வேளையில் உங்களின் கருத்தையும் படித்துக் கொள்கிறேன். நன்றி!

    ReplyDelete
  4. /*
    ஆயுதமாகட்டும் (பிராபாகரன்), பேச்சுவார்த்தையாகட்டும் (தலாய்லாமா), ஆயுதம் + பேச்சுவார்த்தையாகட்டும் (யாசர் அராபத்) வலிமையான நாடுகளின் ஆதரவு இல்லாமல் இனிமேல் யாருக்கும் எந்த சுதந்திரமும் கிடைக்கப்போவது இல்லை. ஈரான் அல்லது வட கொரியாபோல அணு ஆயுதம் (எதிரியும் பயப்படும்/யோசிக்கும்) இருந்தால் மட்டுமே வலிமையானவர்களுடன் பேச்சுவார்த்தையாவது நடத்தமுடியும் என்ற அளவிற்கு உலகம் சென்றுவிட்டது.
    */
    Up to the point...
    இப்படிக்கு,
    கடந்த ஆறு மாதமாக வாய் மற்றும் சகலத்தையும் மூடியிருக்கும் தமிழன்.

    ReplyDelete
  5. கல்வெட்டு,

    ஆஃப்கானிஸ்தானின் தாலிபன்களை எந்த விதத்தில் சேர்ப்பீர்கள். அவர்கள் என்ன அரசியலைத் தான் நம்புகிறார்களா ? அல்லது அவர்களுக்கு பெரிய நாடுகளின் ஆதரவுதான் இருக்கிறதா ? அவர்கள் எப்படி அமெரிக்காவின் பல தளங்களைத் தன்னிடம் விட்டு விட்டு ஓட, அமெரிக்கர்களுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார்கள் ?

    அமெரிக்கா தற்போது ஆஃப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியிலிருந்து முற்றாக விலகியிருப்பது தெரியுமல்லவா ?

    ReplyDelete
  6. //Anonymous said...Monday, December 07, 2009 12:11:00 ப்ம் கல்வெட்டு,

    ஆஃப்கானிஸ்தானின் தாலிபன்களை எந்த விதத்தில் சேர்ப்பீர்கள். அவர்கள் என்ன அரசியலைத் தான் நம்புகிறார்களா ? அல்லது அவர்களுக்கு பெரிய நாடுகளின் ஆதரவுதான் இருக்கிறதா ? அவர்கள் எப்படி அமெரிக்காவின் பல தளங்களைத் தன்னிடம் விட்டு விட்டு ஓட, அமெரிக்கர்களுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார்கள் ?

    அமெரிக்கா தற்போது ஆஃப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியிலிருந்து முற்றாக விலகியிருப்பது தெரியுமல்லவா ?//



    அனானி,
    பல்வேறு அரசியல் சமூக கராணங்களுக்காக தனி நாடு கேட்கும் அல்லது தனி நாடாக பிரகடணப்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் அரசியலையும் அது சார்ந்த போர்/பேச்சு அரசியல் முயற்சிகளையும் ஈழம்‍,பாலஸ்தீனம்,திபெத் என்று ஒரு புள்ளியில் விமர்சித்து உள்ளேன்.

    ஆப்கான் தாலிபன்கள் யார் ? அவர்களின் போராட்ட நோக்கம் என்ன என்று புரிந்துதான் கேள்வி கேட்கிறார்களா?

    சுருங்கச் சொன்னால் தாலிபான்களின் நோக்கம் "ஆப்கானில் இஸ்லாமிய சரியத் சட்டங்களைச் அப்ப‌டியே செயல்படுத்துவதுதான். அவர்கள் யாரிடமும் தனி நாடுகேட்கவில்லை."

    http://www.institute-for-afghan-studies.org/AFGHAN%20CONFLICT/TALIBAN/intro_kakar.htm

    நான் மேலே கொடுத்துள்ள இணைப்பு ஒருவரின் பார்வை. இதில் மாறுபாடு இருக்கலாம் உங்களுக்கு.

    ஆனால் எனது புரிதலில் ஆப்கான் தாலிபான்களின் நோக்கம் நான் கட்டுரையில் சொன்ன மற்றவற்றுடன் ஒத்துப்போகவில்லை.

    **

    தாலிபான் அமெரிக்க சண்டை வேறு காரணங்களுக்கானது.

    நன்றி!

    ReplyDelete
  7. பாத்துட்டேன் profilela உங்க போட்டோவ.. அது உங்க போட்டொதான்ன்னு இதுவரைக்கும் தெரியாது... அப்புறம் என் போட்டோ (பெரிய... ரொம்ப தெளிவா closeupla) பலர் ப்ளாகுல வந்துருக்கு... நன்றி.. படிச்சுட்டு appurama வர்றேன் உங்க ப்ளாக்கதான்..(in future)

    ReplyDelete