Tuesday, November 17, 2009

பாலஸ்தீனம்-இலங்கை-திபெத் -- சீனா - இந்தியா- இஸ்ரேல்-அமெரிக்கா--- ஒபாமா

மைதிக்கான நோபல் பரிசு என்பது சினிமா நடிகர் விஜய் வாங்கிய டாக்டர் பட்டம் போன்றது. எந்த விருதுகளும் அது யாருக்கு அளிக்கப்படுகிறது என்பதில்தான் தனக்கான பெருமையை, தனிச்சிறப்பை வெளிக்காட்டுகிறது. பத்மசிரி என்ற விருது சினிமா நடிகர் விவேக்கிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே சத்யஜித்ரேக்கும்(1958) ஒருகாலத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. நாகேஷ் என்ற ஒரு நடிகர், நம்பியார் என்ற ஒரு நடிகர், இவர்கள் எல்லாம் அவர்கள் பாட்டுக்கு நடித்துவிட்டுப் போனவர்கள்.

விவேக் காமெடி நடிகரா அல்லது விருதே காமெடியா?

அறிவியல் வரிசையில் கொடுக்கப்படும் நோபல் பரிசிற்கான தகுதிகள் தீர்க்கமாக இருப்பதாலும் , அதை நிரூபிக்க முடிவதாலும் இன்னும் அதன்மீது நம்பகத்தன்மை இருக்கிறது எனக்கு. அமைதிக்கான நோபல் என்பது இந்த நூற்றாண்டின் அதிகபட்சக்காமெடி.

**
பாமா
ஒபாமாவிடம் இதுவரை பிடித்தது அவரின் பேச்சு. திராவிட இயக்கத்தலைவர்கள்போல தீர்க்கமான பேச்சு. இவரின் செயல்பாடுகள் ஒவ்வொன்றாய் வெளியில் வரத்தொடங்கியுள்ளது. இதுவரை மருத்துவக்காப்பீடு, பொருளாதாரம் என்று அமெரிக்கப் பிரச்சனைகளை எதிர்கொண்டு அதற்கான உரைகளை கனகச்சிதமாக வழங்கிவந்துள்ள ஒபாமா , உலகளாவிய விசயங்களில் இப்போது நாட்டாமையை ஆரம்பித்துள்ளார். தலாய்லாமா அமெரிக்கா வந்தபோது அவரை சந்திக்க ஒபாமா விரும்பவில்லை. தலாய்லாமா சும்மா திரும்பிப்போனார்.

ஜெயலலிதாவிற்குப்பயந்து , கருணாநிதி குடும்பவிழாவில் கலந்துகொள்ளத் தயங்கும் அதிமுக பிராண்ட் முன்னாள் அமைச்சர்கள் போல , சீனாவிற்காக தலாய்லாமாவைத் தவிர்த்துவிட்டார் ஒபாமா என்று நினைக்கத் தோன்றியது. அது இன்று உண்மையாகியுள்ளது.

"We did note that while we recognize that Tibet is part of the People's Republic of China,” - Mr. Obama
http://whitehouse.blogs.foxnews.com/2009/11/17/5619/

***

யாசர் அராபத் ‍- தலாய்லாமா
தலாய்லாமா போல‌ ஒருகாலத்தில் யாசர் அராபத் இப்படித்தான் எல்லா நாட்டிற்கும் பறந்து பறந்து போனார். பல முறை அவர் அந்தநாளைய அமெரிக்க ஜனாதிபதிகளைப்பார்த்து பேசியுள்ளார். இருந்தாலும் சாகும்வரை அவரால் அவர் நினைத்ததை அடையமுடியவில்லை. தலாய்லாமா என்ன நினைக்கிறார் என்று தெரியாது. ஆனால் இவருக்கு அடுத்து "திபெத்தின் தனித்தன்மை" என்ற ஒன்று கேள்விக்குறியே. இனிமேல் ஒபாமா தலாய்லாமாவைச் சந்தித்தாலும் ஒபாமாவின் பேச்சு எந்தத்திசையில் இருக்கும் என்பது தெரிந்ததே.திபெத்தை சீனாவின் பகுதியாக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அறிவித்தபின் , "தனித்துவம் கொண்ட திபெத் நாடு" என்று தலாய்லாமா பேச்சை ஆரம்பிக்க முடியாது.

***

ந்தியா ‍ - தர்மசாலா - திபெத்


"திபெத்திற்கு வெளியே திபெத் அரசாங்கம்" என்று இந்தியாவின் ஆதரவில் இருக்கும் தலாய்லாமாவின் குறைந்தபட்ச மரியாதை இனிமேல் என்ன ஆகுமோ? அமெரிக்காவின் ஆசிர்வதிக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி , ஆசிர்வதிக்கப்பட்ட அரசுகளைத் தாண்டி போட்டி அரசாங்கம் எத்தனைகாலம் தலாய்லாமா நடத்துவார்? அமெரிக்காவின் ஆசியுடன் திபெத் ஒருங்கிணைந்த சீனாவின் பகுதியாக கலந்துவிட்டபிறகு, தனி ஆவர்த்தணம் செய்யும் தலாய்லாமா தீவிரவாதி போன்றவரே.

"அருணாச்சலப் பிரதேசம் இன்னும் பிரச்சனைக்குள்ளான ஒரு பகுதி" என்று இந்தியாவின் பிரதமர் அங்கே சென்றால்கூட யாராவது ஒரு சீனக்குடிமகனை வைத்து சத்தம்போட வைக்கும் சீனா, இனி அமெரிக்கா உதவியுடன் "இந்தியா -தலாய்லாமா - தர்மசாலா" அமைப்பை ஆட்டிப் பார்க்கும்.

இந்திய அர‌சாங்கம், கிரிகெட் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் உதவியுடன் எத்தனை காலத்திற்கு பாகிஸ்தானை எதிர்த்து தேசியம் வளர்க்க முடியும்?

**
சீ
னா - இலங்கை - இந்தியா
யாசர் அராபத் ஒரு காலத்தில் போராளியாக‌ இருந்து பின்னர் அரசியல் பேச்சு வார்த்தை என்று திரும்பியவர். இவரால் இவர் காலம் உள்ளவரை நினைத்ததை அடையமுடியவில்லை. அவர் காலத்திற்கு பின்னாலும் அதே நிலை.



















லாய்லாமா அமைதிவழியில் மட்டும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருப்பவர். சீனா அமெரிக்க கூட்டணியைத்தாண்டி நிச்சயம் இவரால் இவர் நினைத்ததை அடையமுடியாது.



















பி
ராபாகரன்போராளியாக மட்டும் இருந்து, எந்தவித அரசியல் முயற்சிகளிலும் (தலாய்லாமா,யாசர்அராபத் போல) ஈடுபடாமல் , போர் ஒன்றையே நம்பி இறந்துவிட்டவ‌ர். பிரபாகரனாலும் தான் நினைத்ததை தனது காலத்தில் அடைய முடியவில்லை.





















(Civilians stand behind the barbed-wire perimeter fence of the Manik Farm refugee camp located on the outskirts of northern Sri Lankan town of Vavuniya)

ஆயுதமாகட்டும் (பிராபாகரன்), பேச்சுவார்த்தையாகட்டும் (லாய்லாமா), ஆயுதம் + பேச்சுவார்த்தையாகட்டும் (யாசர் அராபத்) வலிமையான நாடுகளின் ஆதரவு இல்லாமல் இனிமேல் யாருக்கும் எந்த சுதந்திரமும் கிடைக்கப்போவது இல்லை. ஈரான் அல்லது வட கொரியாபோல அணு ஆயுதம் (எதிரியும் பயப்படும்/யோசிக்கும்) இருந்தால் மட்டுமே வலிமையானவர்களுடன் பேச்சுவார்த்தையாவது நடத்தமுடியும் என்ற அளவிற்கு உலகம் சென்றுவிட்டது.




















(A group of black children and men standing behind a barbed-wire fence, the boundary of their township, just southwest of the city of Johannesburg, S.Af., 1950.)

ந்தியாவின் சர்வதேச / அயலுறவுக் கொள்கை
இந்தியாவின் சர்வதேச / அயலுறவுக் கொள்கைகள் என்பது உச்சகட்ட‌ காமெடிக் கதம்பம் போல உள்ளது. திடமான நேர்மையான தலைவர்கள் இனி வரப்போவது இல்லை. காசுக்கு ஓட்டுப்போடும் மக்கள் இருக்கும்வரை அதிக காசு உள்ளவர்தான் நாளைய இந்தியாவின் தலைவர்.



.