Friday, October 08, 2010

கொத்துபரோட்டாவும் கம்யூனிச வியாதிகளும்

 சி றையில் இருக்கும் Liu Xiaobo விற்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்து சீனாவிற்கு இனிமா(enema) கொடுத்துள்ளது நோபல் கமிட்டி.


China Angered By Selection of Dissident Liu Xiaobo for Nobel Peace Prize
http://abcnews.go.com/International/china-angry-nobel-peace-prize-dissident/story?id=11830948


நோபலின் அமைதிப்பரிசு என்பது அரசியல் சதுரங்கத்தில் நடத்தப்படும் காய்களின் நடவடிக்கை போன்றது. அதன் மர்மங்கள் விளையாடுபவர்களுக்கே வெளிச்சம்.   (பாலஸ்தீனம்-இலங்கை-திபெத் -- சீனா - இந்தியா- இஸ்ரேல்-அமெரிக்கா--- ஒபாமா ) சீனாவின் கம்யூனிசக் கொள்கைகளையும் அதன் மனித உரிமை அத்து மீறல்களையும் (இந்தியா ஒழுங்கா??  Don't mine us out of existence: Bauxite mine and refinery devastate lives in India) மறுபடியும் பேச இந்தப்பரிசு ஒரு களம் அமைத்துக் கொடுத்துள்ளது.

அதற்காக நோபல் கமிட்டிக்கு ஒரு "" போடலாம்.

மதங்கள் போல எல்லா இசங்களும் ஒரு பகுதியில் ஒரு கால கட்டத்தில் சூழ்நிலைகளின் நிர்பந்தங்களினால் தோற்றுவிக்கப்பட்டவைகளே.  இயேசு (Yahushua . Greek form for the common Hebrew name Joshua) என்று சொல்லப்படுபவர் கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர் கிடையாது(??) .  யூத மத பழக்க வழக்கங்களுக்கு எதிராக போராடிய ஒரு போராளி. அவர்காலத்தில் அவருக்குச் சரி என்று பட்டதை சொல்லத்துணிந்தவர் என்ற அளவிலேயே அவரை நான் பார்க்கிறேன்.  இன்று உள்ள கிறித்துவ மதமும் அது சார்ந்த பல  உட்பிரிவுகளும் தனது பெயரில் தோற்றுவிக்கப்படும் என்று கனவிலும் அவர் நினைத்திருக்கமாட்டார்.  அது போலவே புத்தனும். பொண்டாட்டி பிள்ளைகளை நடு இரவில் விட்டுவிட்டு ஓடிப்போன சித்தார்த்தன் எனது பார்வையில் எந்தச் சிறப்புத்தகுதியும் கொண்டவராகத் தெரியவில்லை. இருந்தாலும் அவரின் தேடலுக்காக அவர் சில சமரசங்களைச் செய்ய நேரிட்டது என்று கொள்ளலாம். அவரும் தனது பெயரில் ஒரு மதம் ஆரம்பிக்கப்பட்டு இப்படி தன்னை கடவுளாக்குவார்கள் , தனது பெயரிலேயே இலங்கையில் கொலை நடத்துவார்கள்  என்று தெரிந்திருக்கமாட்டார்.

உலக அளவில் இன்று நடக்கும் கம்யூனிச கருத்துரைகளும் இப்படித்தான் உள்ளது. தோற்றுவித்தவருக்குப்  பின்னால் மதமாகிப்போன இடியாப்ப சித்தாந்தங்கள் போல , கம்யூனிச கருத்துக்கள் கொத்துபரோட்டாவாக மாறிவிட்டது. இந்தியாவில் இருக்கும் அனைத்து சிகப்புக்கொடி கூட்டங்களும் குருடன் யானையைத் தடவிய கதையாக ஆளுக்கொரு காலையும் சிலர் வாலையும் பிடித்துக்கொண்டு சுயமிழந்த சொம்பாக அவர்களுக்கான சில அடையாளங்களை பூசிக்கொள்கிறார்கள்.

கம்யூனிச‌ அடிப்படையானது, தொழிலாளர்கள் அதாவது மூலதனம் என்ற‌ ஒன்று இல்லாமல் உடல் உழைப்பால் வாழ்பவர்களின் நலன் சார்ந்தது. இயந்திரங்களின் பங்கு பஞ்சாலைகளில் அதிகமான போது உண்டான சித்தாந்தம் இது. இந்த சித்தாந்தம் தோன்றிய கால‌கட்டத்தை ஆராய்வது  இதன் அடிப்படையைப் புரிந்து கொள்வதற்கு முக்கியமானது. கம்யூன் என்பது (நிலப்பிரபுக்களை எதிர்த்து உண்டான ..ஏறக்குறைய கம்யூனிட்டி என்ற அர்தத்தில்) கம்யூனசித்தின் முன்னோடி எனலாம்.

உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட தொழிலாளர்களின் நலனுக்காக உண்டாக்கப்பட்ட நல்லதொரு கோட்பாடு கம்யூனிசம். கம்யூனிச‌ சிற்பியான மார்க்ஸ் மற்றும் எங்க்கெல்ஸ் இணைந்து தோற்றுவித்த இந்த 68 பக்க மேனிவஸ்ட்தான் கம்யூனசத்தின் பைபிள் என்று சொல்லலாம்.

http://www.marxists.org/archive/marx/works/download/pdf/Manifesto.pdf

மார்க்ஸ் இறந்தபிறகு கூட , எங்கெல்ஸால் புதிய அடிக்குறிப்புகள் சேர்க்கப்பட்டது. ( ஒவ்வொரு பதிப்பு வரும் போதும் மார்க்ஸ் எங்கெல்ஸ் சரிபார்ப்பார்கள்) கம்யூனிச‌‌ம் பற்றித் தெரிந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் வேறு எந்த புண்ணாக்க்கு கட்சிக் கொள்கைகளையும் பார்ப்பதற்குமுன் ,  ஆரம்பிக்க வேண்டிய இடம் இந்த மேனிவஸ்ட்தான்.

இந்த 68 பக்க அறிக்கைதான் உலகில் பலரால் பலவாறு அமுலாக்கம் செய்யப்பட்டது.
  1. லெனினின் கம்யூனிச‌‌ அமலாக்கம்
  2. மாவோவின் கம்யூனிச‌‌ அமலாக்கம்
  3. பிடலின் கம்யூனிச‌‌ அமலாக்கம்
  4. சேயின் கம்யூனிச‌‌ அமலாக்கம்
  5. கிம் (வட கொரியா) கம்யூனிச‌‌ அமலாக்கம்
இவை அனைத்திற்கும் ஒரே மூலம்தான். இந்த 68 பக்க அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே அவரவர் அவருக்கான சமையலை அவர்களின் வாய்ருசிக்கு ஏற்ப செய்தார்கள். அதில் எந்த அளவிற்கு மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது அவரவருக்கு வெளிச்சம். ஆனால் ஒவ்வொருவரின் அமுலாக்க அணுகுமுறையும் முற்றிலும் வேறு வேறானது. அதனால்தான் அது லெனினிசமாகம், மாவோசிசமாகவும் அறியப்படுகிறது.

இந்தியாவில் இருக்கும் கம்யூனிசம் என்பது ஒரு வகையான சாம்பார். யாரை எந்தக் கட்சியை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் கொள்கைகள் இந்த 68 பக்க அறிக்கையில் இருந்து எதைக் எடுத்துக் கொள்கிறது என்று பார்த்தால் தெளிவின்மைதான் இருக்கும்.

இந்தியாவிலும் பிரிவினை வர்க்கம் சார்ந்தது என்றாலும் அதைவிட முக்கிய மையம் வர்ணப்பிரச்சனை.

மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் 68 பக்க அறிக்கையில் தொழிலாளி வர்க்கம் இருக்குமே தவிர வர்ணம் இருக்காது. அவர்களுக்கு இந்தியாவில் இருந்த வர்ணம் சார்ந்த அடக்குமுறைகள் தெரிந்திருக்க நியாயம் இல்லை. மேலும் அவர்களின் சூழலும் இந்த அறிக்கை தோன்ற ஊக்கியாக இருந்த காரணிகளும் அன்றைய இந்தியச்சூழலுக்கு அந்நியமானவை. இந்திய சூழ்நிலைக்கான சித்தாந்தம் கம்யூனசித்தை அடிப்படையாகக் கொண்டாலும் இந்திய பிரச்சனைகளை பேசுவதற்காக இருக்க வேண்டும்.

அரேபியா பெண்கள் மணற்புயலில் இருந்து பாதுகாக்க போட ஆரம்பித்த (நபி மற்றும் இஸ்லாமிற்கு முன்னரே இருக்கும் பழக்கம்) முழுச்சொக்காயை தமிழகத்த்லும் போடுவது போல, 68 பக்க அறிக்கையை அப்படியே இந்தியாவில் அமுல்படுத்த முடியாது. எப்படி லெனின் அவரது நிலப்பரப்பிற்கு தோதாக அதை அமுல்படுத்தி லெனினிசமாக ஆக்கினாரோ (அது வெற்றியா தோல்வியா என்பது இப்போதைய விவாதம் அல்ல) அதுபோல இந்தியாவின் வர்ணப்பிரச்சனைகளையும் பேசக்கூடிய ஒன்றை உருவாக்க வேண்டும்.

வர்க்க பேதத்துடன் வர்ணபேதத்தையும் சேர்த்து மேலும் மற்ற மண் சார்ந்த பிரச்சனைகளையும் பேசும் இசம் வேண்டும் நமக்கு. இந்தியாவில் ஒரு கம்யூனிசத்திற்கு மற்ற ஒன்று போலி. :-(((( அப்படித்தான் அழைத்துக் கொள்கிறார்கள். பிழைப்புவாதக் கூட்டணிதான் பெரும்பாலும் இருக்கிறது. 68 பக்க அறிக்கை எந்தனை பேருக்கு இன்னும் பைபிளாக உள்ளது என்று தெரியாது. கட்சியில் சேர்ந்துவிட்ட கொடுமைக்காக கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு ஆட்டு மந்தைபோல கட்டுப்படுபவன் சுயசிந்தனை உள்ளவன் கிடையாது.

எந்த ஒரு அமைப்பும் "Why they exists as political party or an organization?"
என்று அவர்களுக்குள் கேட்டுக்கொள்ளல் அவசியம்.


தகவலுக்கு:
நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?
http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html

மன்மோகன் சிங்கின் காமெடி..ஏம்பா லூசாப்பா நாங்க?
http://kalvetu.blogspot.com/2009/04/blog-post.html


கம்யூனிசம்-காந்தியம்-நாடி ஜோதிடம் மற்றும் பக்கவாட்டு நவீனத்துவம்
http://kalvetu.blogspot.com/2007/10/blog-post_26.html

India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா ?
http://kalvetu.blogspot.com/2007/02/india-inc-stinks-sez.html

ஈராக், கம்யூனசம் கலந்த‌ யோனிக் கவிதைக்கு நாங்கள்தான் அத்தாரிட்டி.
http://kalvetu.blogspot.com/2010/04/blog-post_27.html

There's a tribe in India that is getting pushed off its sacred mountain for a bauxite mine.
http://kalvetu.blogspot.com/2010/07/blog-post_08.html

பாலஸ்தீனம்-இலங்கை-திபெத் -- சீனா - இந்தியா- இஸ்ரேல்-அமெரிக்கா--- ஒபாமா
http://kalvetu.blogspot.com/2009/11/blog-post_17.html

India: Don't mine us out of existence: Bauxite mine and refinery devastate lives in India
http://www.amnesty.org/en/library/info/ASA20/001/2010/en


.